‘இந்தி’அரசின் அண்ட புளுகும் அதன் அடிவருடும் ஆரிய ஊடகங்களும்
கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது – மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது
-கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தபட போவதில்லை-’இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்
கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த “சாஸ்திரி”, பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் ‘இந்தி’யாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ‘இந்தி’ய அரசு தயங்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு ‘இந்தி’யா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான ‘இந்தி’யாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது.துப்பாக்கி சுடும் போர்பயிற்சியை பழகுகிறது ‘இந்தி’யக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை.ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 400ல் ஒருவருக்குக்கூட ‘இந்தி’ய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை..
தமிழ்நாடு ‘இந்தி’யாவில்தான் இருக்கிறதா? என்று கருதவேண்டியுள்ளது.சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ‘இந்தி’ய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் ‘இந்தி’யாவிடம் ஒப்படைத்தது.கடந்த சார்க் மாநாட்டின் போது கொழும்பில் வைத்து ‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் எனைய அதிகாரிகள் பூட்டிய அறைக்குள் சிங்கள அதிபன் ராசபக்சே யுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதில் வழங்க பட்ட உறுதிமொழி கடலில் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள தேவையேற்பட்டால் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்காதீர்கள்! என்று இனவாத சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு இரகசிய சைகை காட்டி விட்டது என்றே நினைக்கவேண்டியுள்ளது
தமிழ்நாட்டில் ராய்ட்டர்ஸ், பி.ரி.ஐ., யு.என்.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை அப்படியே போட்டு வந்தவர்கள் இப்போது சிறிலங்கா துணைத் தூதுவராக இருக்கின்ற அம்சா போடுக்கின்ற எலும்புதுண்டுகளுக்காக இலங்கைக்கு ஆதரவான செய்திகளைத்தான் போடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் எட்டப்பனின் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். அப்படியான ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகளை நாம் செய்ய வேண்டும்.
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மறுமொழி இடுக
-
தொகுப்புகள்
- December 2009 (1)
- நவம்பர் 2009 (1)
- அக்டோபர் 2009 (4)
- செப்டம்பர் 2009 (1)
- ஜூலை 2009 (3)
- ஜூன் 2009 (3)
- மே 2009 (2)
- மார்ச் 2009 (1)
- December 2008 (8)
- நவம்பர் 2008 (6)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS
