புரட்சிகர தமிழ் தேசியம்

விழிதெழு தமிழா! விழிதெழு!

மவுண் ரோடு மகாவிஷ்ணுவின் பயிறு இறையும் நாள் என்னாளோ?

சிங்கள இனவெறி அரசின் கோரப்பற்களில் சிக்கி ஏற்கெனவே சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் நிலை மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாயகத் தமிழகத்தில் எழுச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களை அழித்திட ஆரிய இனவெறியுடன் செயல்பட்டு வரும் ‘இந்தி’யத் தேசிய அரசிற்கு இந்த எழுச்சி அச்சமூட்டுகின்றது. ஆரிய ‘இந்தி’யத் தேசியத்தின் நிழலில் நடனமாடும் ‘இந்து’ உள்ளிட்ட ஆரிய சக்திகளும் இந்த அச்சத்தால் கலக்கமடைந்துள்ளனர்
இந்து பத்திரிகையை பொறுத்தளவில் கல் எங்கே பட்டாலும் காலைத் தூக்கும் பிராணி போல தமிழ்நாட்டில் எது நடந்தாலும் விடுதலை புலிகளை அதோடு வலிந்து இணைத்து பழி சுமத்தும் பத்திரிகையை என்பது எல்லோரும் அறிந்ததே.

சிங்கள அரசு தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை திட்டமிட்டு மறைத்துவிட்டு அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக எங்காவது புலிகள் தாக்கினால் அதனை பெரிதாகக் காட்டுவதும், “புலிகள் 100 பேர் பலி – 200 பேர் பலி” என்று சிங்கள அரசுச் சொல்லும் செய்திகளை கிளிப்பிள்ளைகளாக வாந்தி எடுப்பதும் ஆரிய ஊடகங்கள் தலையாய பணியாக செய்தன. இந்த எழுச்சியை கண்டு பொறுக்க முடியாத ஆரியப் சக்திகள் வழக்கம் போல இப்பொழுதும் தன் ஓலவாயால் ஒப்பாரி வைக்கின்றன.

தமிழர்களுக்கு, எதிராக எழுதுவது, செயல் படுவது என்ற ஒற்றை இலக்க அரசியல் வழி செல்லும் ஆரிய “இந்து” இதுவரை அவதூறுகளை அள்ளிவிட்டு, பரபரப்புச் செய்திகள் என பட்டியலிட்டு தமிழன் பணத்தை கொண்டு தங்கள் தொப்பைகளை நிரப்பி வந்தவர்கள், தங்களை எதிர்க்க யார் இருக்கின்றார்கள் என்ற மமதையில், தமிழ்நாட்டில் தமிழர்கள் வீணாக ஈழ தமிழர்களுக்காக போராடுகிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஒரு மாலினி மூலம் கட்டுரை எழுதி சாபம் விட்டுள்ளார்கள்.

தமிழ் நாட்டில், தமிழன் பணத்தில்,தமிழன் சோற்றில், சென்னை – மவுண் ரோட்டில் பத்திரிக்கை நடத்தி கொண்டு தமிழர் எதிரிகளிடம் “லங்கரத்னா” விருது பெரும் இந்து ராம் கும்பலுக்கு தமிழும், தமிழ்நாடும், தீண்டத்தகாதவர்கள்தான். “சூத்திரன் அரசாளும் தேசம் – ஆரியனுக்கு எதிரி தேசம்” – என்ற மனுதர்மத்தை வாழ்க்கை தர்மமாக்கி வாழம் இந்து – ராம்களால் தமிழர்கள் தமிழர்களுக்காக போராடுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

காசுமீர்,நாகலாந்து,இவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்த மும்பை குண்டுவெடிப்பை கூட கண்டித்து தலையங்கம் தீட்ட வேண்டியதுதானே? பானிபூரி சாப்பிட்டு என்.டி.டிவி பார்த்து கொண்டு இருந்தார்கள்! போய் ஏதாவது புடுங்க வேண்டியது தானே!.இவர்கள் பருப்பு அங்கே வேக வாய்பில்லை. வேக வைக்க நினைத்தாலும் நினைக்கும் போதே வீடு தேடி வந்து கொட்டை பயிறுகள் இறைக்கபட்டு விடும்

தமிழர்,தமிழ்நாடு விவகாரம் என்றால் துள்ளி கொண்டு தலையங்கம் தீட்டுவது ஏன்? தமிழன் இளிச்சவாயன் ..எருமை மாடுகளோடு யாருக்கு உணர்வு அதிகம் என்று சவால் விடுபவன்.. இன்னைய நிலையில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைபட்டு சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் பிளவுபட்டு உள்ள தமிழனை ஒற்றுமை படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டுவதே இன்று தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு உள்ள கடமையாகும்..
என்றாவது ஒரு நாள் தமிழன் விழித்தேழும் போது தின ம..,ராம் கம்பனிகளின் பயிறுகளும் இறைக்கபடும்

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 1 பின்னூட்டம்

‘இந்தி’அரசின் அண்ட புளுகும் அதன் அடிவருடும் ஆரிய ஊடகங்களும்

கச்சத் தீவுக்கு அருகில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை உள்ளதாக சொல்ல முடியாது – மத்திய வெளியுறவு இணை அமைச்சர் அகமது

-கச்ச தீவை திரும்ப பெறுவதால் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தபட போவதில்லை-‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன்

கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் உண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் இலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் அமைப்பதற்காக பெரும்பாடுபட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள அரசு முயன்றபோது இந்தியாவின் பிரதமராக இருந்த “சாஸ்திரி”, பெருந்தன்மையாக அதை ஏற்றுக்கொண்டார். ஏறத்தாழ ஐந்தரை லட்சம் தமிழர்கள் ‘இந்தி’யாவுக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர்.
இலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ‘இந்தி’ய அரசு தயங்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு ‘இந்தி’யா. ஆனால் இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை. ஆனால் வல்லரசான ‘இந்தி’யாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது.துப்பாக்கி சுடும் போர்பயிற்சியை பழகுகிறது ‘இந்தி’யக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை.ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும். இறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால் கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் 400ல் ஒருவருக்குக்கூட ‘இந்தி’ய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை..

தமிழ்நாடு ‘இந்தி’யாவில்தான் இருக்கிறதா? என்று கருதவேண்டியுள்ளது.சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ‘இந்தி’ய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.சர்வதேச கடல் எல்லையை குசராத், மகாராட்டிர மீனவர்கள் தாண்டும்போது, பாகிஸ்தான் அந்த மீனவர்களை சுட்டுத்தள்ளவில்லை. பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் ‘இந்தி’யாவிடம் ஒப்படைத்தது.கடந்த சார்க் மாநாட்டின் போது கொழும்பில் வைத்து ‘இந்தி’ய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் மற்றும் எனைய அதிகாரிகள் பூட்டிய அறைக்குள் சிங்கள அதிபன் ராசபக்சே யுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. அதில் வழங்க பட்ட உறுதிமொழி கடலில் உங்கள் ஆளுமையை நிலை நிறுத்திக்கொள்ள தேவையேற்பட்டால் தமிழக மீனவர்களை சுட்டுத்தள்ள தயங்காதீர்கள்! என்று இனவாத சிங்கள அரசுக்கு இந்திய மத்திய அரசு இரகசிய சைகை காட்டி விட்டது என்றே நினைக்கவேண்டியுள்ளது

தமிழ்நாட்டில் ராய்ட்டர்ஸ், பி.ரி.ஐ., யு.என்.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை அப்படியே போட்டு வந்தவர்கள் இப்போது சிறிலங்கா துணைத் தூதுவராக இருக்கின்ற அம்சா போடுக்கின்ற எலும்புதுண்டுகளுக்காக இலங்கைக்கு ஆதரவான செய்திகளைத்தான் போடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் எட்டப்பனின் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். அப்படியான ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகளை நாம் செய்ய வேண்டும்.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

யார் ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா தமிழா

தம்மை ஆரியர்கள் எனவும், சமக்கிருதம் தமது மொழி எனவும் ஆரியசமாஜங்கள், ஆரிய கழகங்கள் எல்லாம் அமைத்துக் கொண்டு தம்மை உயர்ந்த ஆரியர்கள் எனவும் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள இணையத்தளங்களில் உலாவும் போது மட்டும் தமிழ் என்ற போர்வையைப் போர்த்துக் கொண்டு, ஆரியப்படையெடுப்பு உண்மையில்லை, அதற்கான ஆதாரமெதுவுமில்லையென்றும் கூட பதிவுகள் செய்வதைப் பார்க்கும் போது அவர்களின் பச்சோந்தித் தனம் மட்டுமல்ல, கூழுக்கும் ஆசை அதேவேளையில் மீசைக்கும் ஆசைப்படும் அவர்களைப் பார்க்க அடக்க முடியாத சிரிப்புத் தான் வருகிறது.

அந்தளவுடன் நிறுத்தி விடுகிறார்களா?, இல்லை. ஆரியப் படையெடுப்பு என்பது கிடையாது ஆனால் நாங்கள் ஆரியர்கள், நாங்கள் எங்கிருந்தும் வரவில்லை, இந்தியாவைச் சேர்ந்தவ்ர்கள் தான் ஆனால் ஆரியர்களாகிய எங்களிடமிருந்து தான் தமிழர்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டார்கள் கற்றுக் கொண்டார்கள் என்பதை நிரூபிப்பதில் அவர்களுக்கு அதிகப் பிரியம். அதனால் ஈழத்தமிழர்களையும் இளிச்ச வாயர்களாக நினைத்துக் கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தமது ஆரிய பிராமண மேலாதிக்கத்தை, அறிமுகமேயில்லாதவர்களின் கட்டுரைகளினாலும், இணைப்புக்களின் மூலமும் ‘நிரூபிக்கப்’ பாடுபடும், பல பார்ப்பனப் பரதேசிகள் தமிழர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு தமிழர்களுக்குக் குழிபறிக்கும் போது, தமிழர்களுக்கு விடிவு காலமேற்படுமா?

தமிழினம் இன்று சிங்களவர்களால் படும் நெருக்கடியை விட, தமிழர்களுடன் வாழ்ந்து கொண்டே, தமிழர்களுக்கு எதிராக இயங்கும் பார்ப்பனர்களின் நெருக்கடி பாரிய எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் உண்மை. சிங்களவர்களின் நேரடி எதிர்ப்பை முகம் கொள்வதை விட, பார்ப்பனர்களின் மறைமுகமான எதிர்ப்பை எதிர்கொள்வது தமிழினத்துக்கு என்றும் சவாலாகவே இருந்து வந்துள்ளது.

உதாரணமாக, தமிழ்நாட்டு உறுப்பினர்கள் யாவரும் கட்சி வேறுபாடின்றி இலங்கை சனாதிபதியைச் சந்திக்க மறுத்து ஈழத்தமிழர்களுக்காக தமது சகோதரத்துவத்தைக் காட்டிய போது, தமிழர்களின் முகத்திலறைந்து விட்டு, இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தது மட்டுமல்ல, தனது வீட்டுக்கும் அழைத்து விருந்து வைத்தது யார்? வேறு யாருமல்ல, அதுவும் தமிழ் பேசும் பார்ப்பான் தான்.

ஈழத்தமிழினம் படுகொலை செய்யப்படும் போது, ஈழத்தமிழினம் அழிக்கப்படும் போது அதற்குத் துணைபோய், இலங்கை அரசுடன், இந்திய அரசுக்குத் தெரியாமலே பாதுகாப்புக்குழு அமைத்துத் தமிழர்களை அழிக்கச் சதி செய்வது வேறு யாருமல்ல, அதுவும் ஒரு பார்ப்பான் தான்.

ஈழவிடுதலையைக் கொச்சைப் படுத்தி, பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதிச் சிங்களவர்களுக்கு ஆதரவாகப் பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களும் பார்ப்பனர்கள் தாம்.

உண்மையிலேயே எப்படித்தான் தமிழைப் பேசித் தமிழால், தமிழர்களின் தயவில் வாழ்ந்தாலும் பெரும்பான்மையான பார்ப்பனர்கள் தம்மைத் தமிழர்களாகக் கருதுவதேயில்லை. இரண்டாயிரமாண்டுகளாகத் தமிழர்களுடன், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, அவர்களை ஆதரித்த, இன மக்களுக்கெதிராக இயங்கும், உலகின் முதலாவது மனிதக்குழு பார்ப்பனர்களாகத் தானிருக்க வேண்டும். வள்ளுவப் பெருந்தகையின் “வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு” என்ற வரிகளைத் தமிழர்கள் மறக்கவே கூடாது.

பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள், சமஸ்கிருதம் அவர்களின் மொழி என்பதாகும், அவர்களின் முன்னோர்கள் ஆரியவர்த்தாவிலிருந்து தான் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தான் பார்ப்பனத் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களின் இணையத்தளங்களும், மனுச்மிருதியும் கூறுகின்றன். அதனால் தான் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாக இருந்த இந்த இணையத் தளத்திலேயே “ஆரிய” பார்ப்பனர்கள் நாசூக்காக தமது ஆரிய மேலாதிக்கத்தையும், சங்கத்தமிழில் கூட ஆரியர்களைப் பற்றிக் கூறப்பட்ட்டுள்ளது என ஆரம்பித்து, சங்கத்தமிழ்ப் புலவர்கள் எல்லாம் ஆரியர்கள் தான் என நிரூபிக்கும் பணியில் இறங்கி விட்டார்கள் போலிருக்கிறது. சங்கத்தமிழில் ஆரியர்கள் என்ற சொல் குறிப்பிடப்படுகிறது, அதனால் வந்தேறி ஆரியர்களுக்கும் சங்கத்தமிழுக்கும் தொடர்பு என்றோ அல்லது ஆரியர்களிடமிருந்து தான் சங்கத்தமிழ்ப் பாடல்கள் உருவாகின என்றாகி விடுமா.

தமிழர்களின் ஆரியக் கலப்பற்ற தனித்துவமான மொழி, கலாச்சார அடையாளங்களைக் குலைத்துக் கொச்சைப்படுத்தி, அவற்றைத் தமிழர்கள் இரவல் வாங்கியதாக அல்லது தமிழர்களின் தனித்துவமான இணையற்ற் மொழி, கலாச்சார, இலக்கியங்களில் ஆரியக்கலப்பிருப்பதாக இணைய்த்தளங்களில் ‘நிரூபிக்க’ பார்ப்பன பிரியர்கள் பலர் கிளம்பியிருப்பதை நாம் காணலாம். ஆனால் பார்ப்பனப் பிரியர்கள் என்னதான் இங்கு தமிழர்களுக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கற்பித்தாலும், தமிழர்களின் அறிவு, கலை, கட்டிட, தொழிநுட்பத்துக்குள் வந்தேறி ஆரியர்களையும் நுழைத்துப் பங்கு கேட்டுத் தமிழர்களையும், தமிழையும் தாழ்மைப்படுத்த முனைந்தாலும் தமிழர்கள் வந்தேறி ஆரியர்களை நம்மவர்களாகவே எப்பொழுதுமே ஏற்றுக் கொண்டதில்லை. வடக்கர்களை தம்மிலிருந்து விலக்கித் தான் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதற்குத் தமிழர்களின் வரலாற்றில் போதியளவு ஆதாரங்களுண்டு.

கிறித்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டுத் சங்கத்தமிழ் நூலான அகநானூற்றில் ஒரு இளந்தமிழ்ப் பெண் கூறுகிறாளாம் ” எப்படிச் சோழர்கள் ஆரியர்களை வல்லத்தில் நொருக்கினார்களோ அப்படி என்னுடைய வளையல்களை நொருக்குகிறேன் பார்” என்று.(யாராவது தெரிந்தவர்கள் அந்தப் பாடலைத் தரவும்)

அது மட்டுமல்ல, தமிழையும் தமிழ்ப்புலவர்களையும் பழித்தார்கள் என்பதற்காகப் படையெடுத்துப் போய் ஆரிய வடக்கர்களை கல் சுமக்கச் செய்து, தமிழ்த்தாய்க்குச் சிலையெடுத்ததும், கங்கை வரை படையெடுத்து, வடக்கர்களைக் கொன்று, வெற்றி வாகை சூடி, கங்கை கொண்ட சோழபுரம் அமைத்த வரலாறும், எமது முன்னோர்கள் ஆரியர்களை எதிரிகளாகத் தான் கருதினார்கள் என்பதற்காகச் சான்றாக எம்மிடமுண்டு.

அதனால் தமிழெதிரிப் பார்ப்பனர்கள் என்ன தான் ஆரியக் கூத்தாடினாலும். ஏமாந்து போகாமல், அவர்களின் கோமாளிக் கூத்தை மட்டும் இரசித்து விட்டுக் காரியத்தில் கண்ணாக, விழிப்புடன் இருக்க வேண்டியது தான் உலகத்தமிழர்களின் கடமையாகும்.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 3 பின்னூட்டங்கள்

வருணாசிரமத்துக்கும் தமிழர்களின் சாதிமுறைக்கும் தொடர்பு கிடையாது, தமிழர்களின் சாதிப்பிரிவுகள் தமிழர்களுடையதே

தமிழர்களின் சாதிப்பிரிவுகளின் அடிப்படை பற்றிய தவறான கருத்து தமிழர்களிடையே நிலவி வருகிறது. தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளின் அடிப்படை ஆரிய வர்ணாசிரமமே ( பிராமண, ஸத்திரிய, வைஸ்ய, சூத்திர) என்ற கருத்து தவறானதென்கின்றனர் பல அறிஞர்கள், அதில் குறிப்பாகத் தமிழறிஞரும், சமக்கிருதம் உட்பட பல இந்தியமொழிகளில் புலமை வாய்ந்தவருமாகிய பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் தன்னுடைய The Four Hundred Songs of War and Wisdom” என்ற புறநானூற்றுப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலிலும், திரு.பார்த்தசாரதி அவர்கள் The Tales of An Anklet’ என்ற நூலிலும், கலாநிதி. N.சுப்பிரமணியம் அவரது ‘The Tamils’ என்ற நூலிலும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளை உருவாக்கியவர்கள் தமிழர்களே, தமிழர்களின் சாதி முறைகளும், சாதிப்பெயர்களும் பார்ப்பன வருணாசிரமத்துக்குப் பெருமளவு வேறுபட்டவை என நிரூபிக்கின்றனர் அறிஞர்கள்.

வருணாசிரமச் சாதிப்பாகுபாட்டிலுள்ளது பிரமிட் போன்ற மேலாதிக்கத் தன்மை தமிழர்களின் சாதிப்பிரிவுகளில் கிடையாது, அத்துடன் சாதியடிப்படையிலான வெறுப்பும் தமிழ்ச்சாதிப் பிரிவுகளுக்கிடையில் கிடையாது. ஆனால் அதன் கருத்து, தமிழ்ச்சாதிகளுக்கிடையில் சமத்துவமின்மை கிடையாது என்பதல்ல.

தமிழர்களின் சாதிமுறைக்கு அடிப்படை பார்ப்பனர்களின் வருணாசிரமல்ல, நிலவுரிமை அடிப்படையிலான ஆண்டான் – அடிமை வழக்கமே தமிழர்களிடையேயுள்ள சாதிப்பிரிவுகளுக்கு அடிப்படையாகும். தமிழ்மண்ணில் நிலவுரிமையுடன், நிலங்களைச் சொந்தமாகக் கொண்டிருந்த தமிழ் மக்கள் குழுக்கள் பல “வெள்ளாளர்” என்ற பொதுவான பெயருடன் அரசியல், பொருளாதார வலிமையையும் , ஆதிக்கத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

தமிழர்களின் சாதிப்பாகுபாட்டுக்கு அடிப்படை எதுவாக இருந்தாலும், இந்த சாதிமுறைகள் தமிழ்ச்சமுதாயத்தைப் பிளவடையச் செய்து, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. நாம் தமிழர் என்ற அடையாளத்தை மட்டும் தமது ஓரே அடையாளமாகத் தமிழர்களை நினைக்க ஊக்குவிப்பதும், அந்த நோக்கத்தையடைய உழைப்பது மட்டுமே தமிழர்களுக்கிடையேயுள்ள சாதியடிப்படையிலான வேறுபாடுகளைக் களைந்து, நாளடைவில் சாதியற்ற தமிழ்ச்சமுதாயம் உருவாக வழிவகுக்கும்.

பல அறிஞர்களின் கருத்துப்படி தமிழர்களின் சாதிப்பாகுபாட்டை உருவாக்கியது தமிழர்களே அப்படியானால் பார்ப்பனர்களுக்கும், தமிழர்களின் சாதி முறைக்கும் தொடர்பு கிடையாது. பார்ப்பன வருணாசிரமத்துக்கும் தமிழ்ச்சாதிகளுக்கும் தொடர்பில்லை என்றால் அந்தணர்கள், பெருமானார்கள் எனப் பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப் படுவதெல்லாம் தமிழர்களையே தவிர, வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனர்களையல்ல என்பது தெளிவாகிறதல்லவா?
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இக்களத்தில் கூட, தமிழ்ச்சாதியையும், வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினரையும் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்கச் சிலர் முயன்றதை நாம் அறிவோம்.

உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடன் இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்களின், இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைந்ததைப் பலரும் அறிவர்.

இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியைத் தமிழர்களுக்கு அறிமுகப் படுத்திய ஆரியர்களும் அவர்களின் வாலாயங்களாகிய தமிழெதிரிப் பார்ப்பனர்களும், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலம் அதாவது, புராணத்துப் புனைகதைகளை தமிழர்களிடையே இன்றுள்ள பல சாதிப்பிரிவுகளுக்கும் இணைத்து, தமிழர்களைப் பிரித்தனர் ஆனால் அவர்களை விட மோசமாக அந்தப்புனைகதைகளை இன்றும் தாங்கிப்பிடித்துக் கொண்டு, தமக்கும் சத்திரியர் என்ற வருணப் பிரிவுக்கும் ஏதோ தொடர்பிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு, தமிழர்களே தமிழர்களைத் தாழ்த்தும் கொடுமையை வன்னியர்கள் மட்டுமல்ல தமிழர்களின் பல சாதிக்குழுவினர்களும் செய்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரியச் சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்டுவதற்கு ஆளுக்காள் முந்திக் கொண்டார்கள், ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகப் பார்ப்பனர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டது.

இவ்வாறு இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதை தான், உண்மையில் சுத்தத் தமிழர்களான, மலையாளிகளும் அவர்களின் பரசுராம கோத்திரத்தில் வந்ததாகக் கூறப்படும் குப்பைக்கதையும், தமிழர்களைப் பிரித்தாளுவதற்காக நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில தமிழ்ப்பற்றுள்ள பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், எம்முடைய இன்றைய பிராமண நண்பர்கள் விரும்பாது விட்டாலும், உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், ஆறு மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் இதுவும்.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக், தமிழ்நாட்டுத் தமிழர்களான வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள். அதனால் தான் தமிழர்களான வன்னியர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதாலும் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.

உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை – அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் – தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டிய நாட்டுத் தமிழர்கள்.

இத் தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபக்கேடு அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் வெளிப்படையாகச் சொல்வதையும்,வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல், ஜால்ரா போடுவதையும் நாம் தமிழர்களும் ஏற்றுக்கொள்வதாகி விடுகிறது என்பதை விடக் கேவலம் வேறெதுவும் கிடையாது.

திசெம்பர் 4, 2008 Posted by | Uncategorized | 5 பின்னூட்டங்கள்

வந்தேறிகளின் கூடாரமான தமிழ்நாடும்-வேடிக்கை பார்க்கும் அடிமை தமிழனும்

வந்தேறிகளின் ஆட்டம் வரவர தமிழ்நாட்டில் எல்லை மீறி போய்கொண்டுள்ளது..இவ்வளவு நடந்தும் ஏதோ என்னமோ செய்கிறார்கள் தனக்கு ஒன்றுமில்லை என வேடிக்கை பார்கிறான் தமிழன் என்ன காரணம்? ஒரு தமிழின மரபியல் ரீதியான ஆய்வு
இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழி பேசி பல்வேறு இனங்களாக வாழ்ந்து வரும் மாந்த இனம் தொடக்கத்தில் ஒரே இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என மாந்தவியலர் கூறுகின்றனர். ஒரே இடத்தில் வாழ்ந்தபொழுது ஒரு மொழியையே அவர்கள் பேசியிருக்க வேண்டும். பின்பு தான் அவர்கள் பல்கிப் பெருகிப் படிப்படியாக உலகின் பல்வேறிடங்கட்கும் பரவியிருத்தல் வேண்டும். இவ்வாறு அவர்கள் தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்த பிறகு, இக்கூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பிழந்து தாங்கள் பேசிவந்த முதல் மொழியின் திரிபுகளிலிருந்தும் சிதைவுகளிலிருந்தும் பல்வேறு மொழிகளை உருவாக்கிக் கொண்டிருத்தல் வேண்டும்.
தென்பெருங் கடலுள் மூழ்கிப்போன குமரிக் கண்டமே மனிதனின் பிறப்பிடமாக இருத்தல் வேண்டும் என மாந்தரியல், மண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அக் குமரிக்கண்டமே தமிழனின் பிறந்தகம் என்பதைத் தமிழிலக்கியச் சான்றுகள் செவிவழிச் சான்றுகள் கொண்டும் வரலாற்றுச் சான்றுகள் கொண்டும் அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இனி அம்மாந்தர் பேசிய உலக முதன்மொழி தமிழே என்பதும் மொழியியல் அடிப்படையில் மொழி அறிஞர்களால் நிறுவப்பட்டுள்ளது. ஆயினும் தமிழன் நாகரிகமுற்ற முதல் மாந்தனாகக் கருதப்படல் கூடாது என்பது சிலரின் உட்கிடக்கையாக இருப்பதால், அத்தகையோர் மேற்கூறியவற்றுக்கெல்லாம் போதிய சான்றுகள் இல்லை என அவற்றை மறுப்பர்..

உலகிலேயே பிற இனத்தினர் மீது சிறிதும் வெறுப்போ பகைமை உணர்வோ இல்லாத இனம் தமிழினம் ஒன்றே. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பது தனிப்பட்ட யாரோ ஒரு தமிழ்ப்புலவரின் உள்ளத்தின் விரிவை மட்டும் காட்டுவதன்று. அது தமிழனின் குருதியிலேயே ஊறிப்போன உணர்வு. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களைக் கூர்ந்து கவனிப்போர் அவர்கள்பால் பிறஇனத்தினரிடம் காணப்படாத இரண்டு அடிப்படைத் தன்மைகளைக் காணலாம்.ஒன்று, தங்களிடையே வாழவந்து தங்களையே கீழே தள்ளி மிதக்கும் பிற இனத்தினரின் சூழ்ச்சிகள், சுரண்டல்களினின்றும், கயமைகள் கரவுகளினின்றும், ஏன், வெளிப்படையான சிறுமைகள் அடாவடித்தனங்கள் மேலாண்மைகளின்றும் கூடத் தங்களையும் தங்கள் உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி கடுகளவும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டு, பிற இனங்களின் மீது கடுகளவும் இனவெறுப்பின்மை. மீண்டும் சொல்வேன் உலகிலேயே பிற இனங்களின் மீது இனவெறுப்பற்ற இனம் தமிழினம் ஒன்றே. மீண்டும் மீண்டும் சொல்வேன், பிற இனத்தவரை வெறுக்காத இனம், பிற இனத்தவரின் சுரண்டல்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சி அற்ற இனம் தமிழினம்.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடியாகத் தமிழன் இருந்தமையால், தொடக்க வழிகளில் அவனை எதிர்க்க வேறு எந்த இனமும் இருந்ததில்லை. அதனால் யாரிடமிருந்தும் தன்னைக் காத்துக் கொள்ளும் தற்காப்புணர்ச்சியும் அவனுக்கு ஏற்பட்டதில்லை.பல்வேறு தாக்கங்களால் அவற்றின் இனப்பண்பு மாறிப் போனாலும் சொந்த மண்ணிலேயே தொடர்ந்து பன்னூறு ஊழிக்காலம் வாழ்ந்த, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழினம் பிறரிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வையோ, பிறரைத் தன் எதிரியாகக் கருதி வெறுப்புக் கொள்ளும் இனவேறுபாட்டுணர்வையோ உருவாக்கிக் கொள்ளாமலேயே போய்விட்டது.

படிக்காத, எழுத்தறிவில்லாத ஒரு பொதுநிலையான (சராசரி) கன்னடனை, ஆந்திரனைக், கேரளத்தானை எடுத்துக் கொள்ளுங்கள். தன் இனம், மொழி என்று வரும் பொழுது கொப்புளித்துப் பொங்கி எழுகின்றானே. ஆனால் பொதுநிலையான ஒரு தமிழனை எடுத்துக் கொள்ளுங்கள். இனத்தளவில் தன்னைக் காத்துக் கொள்ளக் கடுகளவு சூடும் சுரணையின்றி இருக்கின்றானே. பொதுநிலைத்தமிழன் என்ன? படித்துப் பதவி பெற்று வயிறு வளர்க்கும் பெரும்பான்மைத் தமிழனுக்குக் கூட மொழி பற்றிய அக்கறை கடுகளவும் இல்லையே. தன் இனம் இப்படித் தாழ்ந்து கிடக்கின்றதே என்ற சூடு சுரணை இல்லாமல்தானே அவன் வயிற்றை நிரப்பிக் கொள்கின்றான்!—-நன்றி (பேரா. ம.லெ. தங்கப்பா )

மரபு வழியான இனப்பண்பு அல்லது தற்காப்புணர்ச்சி அவன் குருதியில் இல்லை என்பதைத் தவிரத் தமிழன் இப்படி இனவுணர்ச்சி இல்லாதிருப்பதற்கு வேறென்ன அடிப்படைக் காரணம் சொல்ல முடியும்?இவ்வாறு வந்தவர்களை எல்லாம் தனது சகோதர்களாக பார்த்மையால் இன்று தமிழனுக்கு நிகழ்காலத்தில் நேர்ந்துள்ள அவலம் விவரிக்க முடியாதுள்ளது..

ஒரு கன்னடத்து வந்தேறி  காந்கிரசு கட்சியின்  சார்பில் சொல்கிறது ஈழத்துக்காக போராடுபவர்கள் அங்கு சென்று போராட வேண்டுமாம் தமிழனுடைய தாய் பூமியான தமிழ் நாட்டில் போராடமல் அண்டார்டிக்காவில் சென்றா போராடுவார்கள்?
அதே கட்சியை சேர்ந்த இன்னோரு தெலுங்கு வந்தேறி சொல்கிறது ஈழ போராளிகளை ஆதரிப்பவர்கள் எல்லாம் தமிழினவிரோதிகளாம்.. வரவர யார் தமிழர்கள் என்ற குழப்பமே மேலிடுகிறது..இன்னும் இந்த ஆரிய வந்தேறிகளை பற்றி நாம் சொல்லிதான் தெரியவேண்டியது இல்லை சோ+சப்புற மணிசாமி+மணிஆட்டும் ஐயர்+கன்னடத்து பாப்பாத்தி+மவுண்ரோடு மகாவிஷ்ணு பொந்து ராம்+தினமலம் என இவர்கள் பட்டியல் நீளுகிற்து..

வந்தவரை எல்லாம் வாழ வைத்த, தமிழனின் உழைப்பில் தின்று தமிழ் மண்ணின் சோறை தின்று ஆட்சி அதிகாரம் உடையவர்களாக ஆக்கிய தமிழனின் முகத்திலேயே கழியும் இவர்களின் செயலை என்னவென்று சொல்ல?நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது போகிற இடத்துக்கு தான் போகும்..வந்தேறிகளுக்கு தமிழ் ஒரு மொழி மளிகைசாமான் வாங்கவோ அல்லது  பேரம் பேசவோ தமிழ்நாட்டில் அது பயன் படுகிறது..அவ்வளவுதான்!ஆனால் பச்சை தமிழனுக்கு அது உயிர் உணர்வு தன்மானம் சுய மரியாதை!வந்தேறிகளை தயவு செய்து தமிழ் படிப்பதை நிறுத்த சொல்லுங்கள் வந்தேறிகளிடம் தமிழரின் வீரம் வரலாறு,பெருமை என அவர்களை படிக்க சொல்வதால் அவர்களுக்கு தமிழ் இனம் என முகமூடியும் கிடைக்கிறது மேலும் தமிழரின் வரலாறு கண்டு பொறாமையும் உண்டாகிறது இவனிடம் போய் ஈழத்தில் உன் உறவுகள் சாகிறார்கள் என்றால் சிரிக்கவே செய்வான்..அவன் ரத்தம் எவ்வாறு வேலை செய்யும்?

பேக்கரிகடை டீ கடை முதலாளி மலையாளி!–வாங்கி தின்பவன் தமிழன்
வட்டிக்கு விடுபவன் மார்வாடி–வட்டிகட்டுபவன் தமிழன்
மந்திரம் விடுபவன் ஆரியன் -தட்சணை கொடுப்பவன் தமிழன்

இவ்வாறான் நிலைமைகள் மாறி  எமது தமிழ்மண்ணில்  ஆள்பவனும் தமிழன் ஆளபடுவனும் தமிழன் என்ற நிலைமை என்று வருகிறதோ அன்றுதான் தமிழ் இனம் உருப்படும்..

நவம்பர் 21, 2008 Posted by | Uncategorized | | 2 பின்னூட்டங்கள்

ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்?

viduthalai

மாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..

சராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..

ஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா? தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா? காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல் நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது?

எங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது? அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள்! நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்?

திசெம்பர் 1, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழின எதிரிகள் எந்த வகைபட்டவர்கள்?

fr

அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகள்..
எதிராளிகளை இரண்டு வகைகளாக பிரிக்கிறார் கோகன் அதில்
1.கருத்து எதிராளிகள்
2.அடிக்குடல் எதிராளிகள்

அதை சற்று விரிவாக பார்ப்போம்..
கருத்து எதிராளிகள்
ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றி உங்கள் கருத்திற்கு மாற்று கருத்து வைப்பவர் கருத்து எதிராளி.. நீங்கள் நான் இப்படி செய்ய நினைக்கிறேன் என்கிறீர்கள் ..அவரோ ஏன் இதை இப்படி செய்யகூடாது என்கிறார். கருத்து எதிராளிகளை ஓரளவுக்கு சமாளிக்க முடியும்..முதலில் கருத்துகள்.. தகவல்கள்..அனுபவம் ..விட்டு கொடுத்தல் தீர்வு காண பட வேண்டும் என்பதில் ஒற்றுமை ஆகிய காரணிகள் சரியான இறுதி தீர்வை நோக்கி நகர்த்தும்.. இறுதி தீர்வு சரியாக அமையும் பட்சத்தில் நீங்கள் எதிரியாக நினைத்த மாற்று கருத்தாளர் உங்கள் உற்ற நண்பனாக கூட மாற முடியும்.

பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஏன் தீர்க்கபடமாலே போகின்றன?

நம்பிக்கையை வளர்ப்பது..தீர்க்கவேண்டிய பிரச்சனையை கவனம் செலுத்துவது ஆகியவற்றை பெரும்பான்மையோர் மதிப்பதில்லை..பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே இழுத்தடிப்புக்ள் கடினமான தங்களின் முடிவையே பிறர் மீது திணித்தல் ..ஏற்று கொள்ளுமாறு எச்சரிக்கை விடுத்தல் என இரு அணிகளும் தங்களுக்குள் எதிரியாக மாறி விடுகிறார்கள் ..அங்கு தீர்க்க பட வேண்டிய பிரச்சனையின் கருத்து குவியம் மாற்ற படுகிறது.. நீயா? நானா? என்ற போட்டி மனப்பான்மையே உண்டாகிறது.. இவ்வறான நிலைமையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்று கூடி கூடி பேசி ஏதோ நாங்களும் பேசுகிறோம் என்று பாசாங்கு மட்டுமே உலகத்திற்காக செய்ய முடியும்..ஆனால் தீர்வு என்பது கடைசிவரை எட்டபட முடியாது!!( காசுமீரு.திபெத், காசா)

2.அடிக்குடல் எதிராளிகள்

கருத்து எதிராளிகளை நீங்கள் ஒரளவுக்கு உங்களுக்கு எதிராக செயல்படாமல் சில காலமாவது உங்கள் அறிவு ரீதியாக தடுக்கலாம்..ஆனால் அடிக்குடல் எதிராளிகள் உணர்ச்சி பூர்வமாக எதிர்ப்பவர்கள் உங்கள் தரப்பு கருத்து கள் நியாங்கள் சாதகங்கள் ஆகியவற்றை இவர்கள் மதிப்பதில்லை அடிப்படையில் சக மனிதன் என்ற வகையில் கூட ஏற்பதில்லை..நீங்கள் எடுக்கும் நிலைகளுக்கு தீமையானா கற்பிதங்களை ஏற்படுத்த முற்படுவார்.. நீங்கள் கூக்குரலிடும் எந்த பிரச்ச்னையும் இவர்கள் காதில் விழாது.. இப்படி அடிக்குடல் எதிராளிகள் உருவாகிவிட்டால் அவரை நீங்கள் எப்போதும் மாற்ற முடியாது!

அடிக்குடல் எதிராளிகள் எப்படி உருவாகிறார்கள்?

என்னுடைய முகம் இரண்டு உண்டு ஒன்று உலகிற்கான பொதுமுகம்.. இரண்டு சுய முகம்.. என்னுடைய பொது முகம் இப்படித்தான் உலகிற்கு தெரிய வேண்டும் என விருப்பம் வைத்திருப்போம்.. அதை உலகிற்காக ஓரளவிற்கேணும் அதை நம்பும் படி கட்டி எழுப்பி இருப்போம்..
இரண்டாவது எனக்கான சுய முகம்..

என்னை பற்றி நானே அறிந்து வைத்திருப்பது..என்னுடைய திறமைகள்… அறிவு .. மற்றும் ஆளுமை ஆகியன.. இந்த இரண்டு பிம்பங்களும் ஒன்றுகொன்று சம்பந்தபட்டவை.. மிக நுண்ணியமாக இணைக்கபட்டவை..
இவ்வாறான் இரு பிம்பம்களும் முக்கிய பிரச்சனைகளில் சரிந்து விழ இருக்கும் போது எந்த ஒரு தனி மனிதனும் அவ்வாறு இலகுவில் விடுவதில்லை.. தனக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களில் கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக அந்த பிம்பத்தை நிலை நிறுத்த முற்படுவான் .. உலகதிற்கே தனக்கு எதிரானவன் கோமாளி என்றும் தனக்கு கீழே தான் அவன் என்றும் காட்ட முற்படுவான்.. எது எவ்வாறாகினும் ஆதிக்க சக்தியின் மனபாங்கின் ஒரு பகுதியே இது..

அடிக்குடல் எதிரிகளை எப்படி சமாளிப்பது?
அடிக்குடல் எதிராளிகள் நீங்கள் அடிப்படையில் மனிதன் என்கிற ரீதியில் எதிர்பவர் ஆதலால் கீழ் கண்ட இரண்டு வழிமுறைகளே உள்ளன
1.சமமான வலிமையை கொண்டிருத்தல்
2. எதிரியின் முக்கியத்துவத்தை குறைத்தல்

அடிக்குடல் எதிரியாக அறியப்பட்ட நபரோடு குறைந்த பட்சம் நாம் சமமான வலிமையோடு இருக்க வேண்டும்..சம வலிமையோடு கூடிய நீண்ட மவுனமும் அடிக்குடல் எதிராளிக்கு பயத்தினை உருவாக்கும். அடிக்குடல் எதிராளியின் சிறிய விடயங்களிலும் மூக்கை நிழைத்து ஆராய முற்படுவீர்களானால் அது அடிக்குடல் எதிராளியின் உங்களை பற்றிய மதிப்பீடு தவறாக போகும் வாய்ப்பும் உள்ளது.. உங்கள் இலக்கு எது என்று அவர் சுலபமாக ஊகித்து உணர்வார்..

இரண்டாவதான எதிரியின் முக்கியத்துவதை குறைத்தல்.

ஒருவரின் முக்கியத்துவத்தை நாமே தான் தீர்மானம் செய்கிறோம்.. ஒரு வேலைக்காக நாம் ஒருவரை ஒன்றுக்கு மூன்று முறை சந்திப்போமானால் அவரின் முக்கியத்துவம் அதிக மாகிறது.. அமெரிக்க அறிஞர் தாமஸ் ஜெபர்சன் அவரின் கருத்துபடி ஒருவர் உங்கள் இதயத்தில் உங்கள் அனுமதி இன்றி நுழைய முடியாது. அந்த வகையில் அடிக்குடல் எதிராளிகள் இவரால் முடியும் என்று உங்கள் இதயத்தில் நுழைந்துவிட்டல் அதைவிட ஆபத்து வேறு இல்லை.. கூடுமானவரை பிரச்சனைகளை நீங்களே எதிர் கொள்ள பழக வேண்டும்..

மேற்கூறியவை அறிஞர் கொர்ப் கோகனின் உங்களால் முடியும் என்ற நூலின் சில பகுதிகளாகும் இதில நாம் கூறவருவது என்னவென்றால் இந்தி அரசு தமிழர்களுக்கான அடிக்குடல் எதிரி என்பதாகும் .. அவ்வப்போது பேச்சு வார்த்தை கலந்து பேசுங்கள் என்று கூறினாலும் தமிழர்களான நாம் ஆரிய சக்திகளுக்கு அடிக்குடல் எதிரிகளே!

இந்தி அரசின் சுய முகம் பொது முகம் என்பது தெற்காசியவில் தன்னை ஒரு பேட்டை ரவுடியாக நிலை நிறுத்துவதாகும்.. இங்கு நடக்கும் முக்கிய பிரச்சனைகளில் தேவை இல்லாமல் மூக்கை நுழைத்து கொண்டு தன்னுடைய அதிகாரத்தினை நிலை நிறுத்துவதாகும் .. உலகின் அருகருகில் பல வல்லரசு நாடுகள் முளைத்து கொண்டு நிற்க இந்த நாட்டை சுற்றி ஏன் எவரும் வல்லரசு ஆக முடியவில்லை? ஏன் சிங்கபூர் ஆசியாவில் தனக்கான இடத்த்தினை பெறும்போது அருகாமையில் இருக்கும் மாலத்தீவால் முடியாதா? இங்கு இந்த ரவுடியிடம் மீறி பிரச்சனை வேறு ஒருவரிடம் செல்லும் போது இவர்களுடைய முக்கியத்துவம் குறைகிறது.. அகி இம்சை அன்னகாவடி என்று ஊரை ஏமாற்ற போட்ட வேடம் கலைகிறது..அதாவது சுய பிம்பம் பொது பிம்பமும் கழண்டு விழுகிறது.. அதற்கு காரணமான ஈழ தமிழர்களை இப்போது காவு வாங்கியாகிவிட்டது.. இந்த ரவுடி வேடத்தினை நிலை நிறுத்த தினமும் நமது மீனவ சகோதரர்களை இழக்கவேண்டி உள்ளது..

இதை மாற்ற என்ன வழி? அதே அறிஞர் கூறியது போல சம வலிமையை தக்க வைக்க வேண்டும்.. தமிழனுக்கென்று வலிமை மிக்க ராணுவம் இருந்திருந்தால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா? என்பதை தமிழக தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.. நாம் ஏன் தமிழ் தேசிய ராணுவத்தை இங்கு கட்டியமைக்க கூடாது?இன்று நம் மீனவர்களை ஓரினச்சேர்கை செய்து அனுப்பி இருக்கிறான் சிங்களவன் இதை விட கேவலமான நிலை உண்டா? இங்கு இந்த இந்தி யாவில் பொது முகம் சுய பிம்பம் என்பது ஆரியமே உயர்ந்தது என்று கட்டமைக்க பட்டுள்ளது..அவர்கள் அடிக்குடல் எதிராளிகளாக கருதுவது அவர்களுக்கு போட்டியாக இருக்கும் தமிழினமே என்பது உறுதியாகிறது.. இதை மாற்ற நாம் சம வலிமையை தக்க வைக்க வேண்டாமா?

அறிஞர் அவர்களின் கூற்றுபடி இரண்டாவதான அடிக்குடல் எதிராளிகளை சமாளிக்க அவர்களின் முக்கியத்துவதை குறைக்கவேண்டும்.. இங்கு என்ன நடந்தாலும் பஞ்சாயத்து டெல்லிக்கு செல்வதை தடுக்கவேண்டும். அது தந்தியடிப்பது.. உண்ணாவிரதம் இருப்பது. நாமே சுயமாக எதுவும் செய்ய முடியாதா? தமிழ் நாட்டை டில்லிக்காரனிடம் கையேந்த வைக்காமல் சுய தேவைகளுக்காக நம் சொந்த காலில் நிற்க முடியாதா? அவர்கள் அவர்களே நாம் நாமே! நமக்கான தேசியம் சாதி சமய மற்ற சமத்துவ தமிழ்தேசியமே அன்றி ஆரிய தேசியம் அல்ல.. மேற்கண்ட புரிதல் தமிழக தோழர்களுக்கு மிக மிக அவசியம்.. தமிழக விடுதலை குறித்து உலகமெங்கும் பரவி வாழும் ஈழ உறவுகளின் ஆதரவும் இங்கு அவசியமாகிறது.. நாமும் இங்கு அடிமைகளே! சுதந்திரம் நமக்கும் வேண்டும் என புரியவைத்தவர்கள் அவர்களே!

(இங்கு மாற்று கருத்து மாணிக்கங்கள் சாதியை உள் நுழைப்பார்கள் என்று தெரியும்..அவ்வாறனவர்கள் தமிழ் தேசியத்தில் சாதியை ஒழிக்க பலமான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.. அதை விடுத்து அந்த சாதிக்காரன் அப்போது இதை எங்களுக்கு செய்தான்.. இவர்கள் இப்போது செய்கிறார்கள்.. என ஓலமிடுவதை விடவேண்டும்.. ஏன் ஆரிய சக்திகளுக்குள் உள் முரண்பாடு இல்லையா? ஆனால் பொது எதிரி தமிழன் தான் என்று ஒன்றாக கூடி கொக்கரிக்கிறார்களே! நம்மால் ஏன் பொது எதிரி ஆரிய சக்திகள் தான் என்று கொக்கரிக்க முடியாதா? தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடுகிற தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது இங்கு போராடும் ஒருவரை அவர்கள் தலைவனாக ஏற்று கொண்டுள்ளர்களா? இந்த இந்திய தேசத்தில் இருந்து கொண்டு சாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லி யாரும் முழுமையாக ஒழித்துவிட முடியாது.. இவர்கள் பிழைப்பு ஓடுவதே.. இத்து போன வருணாசிரம கொள்கைகளை கொண்டுதான்.. தமிழகத்தின் தன்னுரிமைக்கான போராட்டங்கள் எழும் போதெல்லாம் அங்கு ரோக்காரனின் சாதிய விளையாட்டுகள் ஆரம்பிக்கும் .. இதை சற்று கூர்ந்து கவனித்தால் புரிந்து கொள்ளலாம்)

அதை தோழர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்..

அதற்கான செயல்திட்டதினை வகுத்து செயல்பட தயாராவோம்!

(இங்கு ஆய்வு செய்யபட்டது தமிழின எதிரிகள் தொடர்பாக .. துரோகிகள் குறித்து தனிபதிவு வெளிவரும்)

நவம்பர் 20, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

பிரியாணி தின்ன தயாராகும் தமிழ்நாட்டு அரசியல் வியாதிகள்!

buf

எருமை மாட்டின் சொரணைக்கு சவால் விடும் நமது வியாதிகள் ராசபக்சே வீட்டில் பிரியாணி தின்ன தயாராகி வருகிறார்கள்..இதில் கூத்து என்னவென்றால் இவ்வளவு நாட்கள் அங்கே தமிழினம் முட்கம்பி வேலிகளுக்குள் சிக்குண்டு இருப்பது தெரியாதா? இப்போதுதான் இவர்களுடைய பூனைக்கண் திறந்ததா? கூர்ந்து கவனித்தால் தமிழர்களுக்கு ஒன்று புலப்படும்.. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மே மாத பேரவலத்தினை தடுத்து நிறுத்த முயன்ற போது அதை குறுக்குசால் ஓட்டி கெடுத்தது யார்? என்பது நன்றாகவே தெரியும்.இப்போதும் அதே நோக்கத்தில் தான் இந்த பிரியாணி தின்னும் நிகழ்வு நடைபெற போகிறது..

briyani

அங்கே மேற்குலகம் முட்கம்பி வேலிகளுக்குள் இருக்கும் மக்களை விடுதலை செய்..அங்கே மனிததிற்கான அடிப்படை உரிமைகள் துளி கூட இல்லை.. gsp+ வரிசலுகையை நிறுத்துவோம் என மிரட்டிகொண்டிருக்கும் போது.. தனது சக ஆரிய பங்காளி துன்புறுவதை இந்தி யா பார்த்து கொண்டு இருக்குமா? நம் கையை கொண்டே நமது கை குத்தும் வஞ்சகத்தினை நாசுக்காக நீண்ட நாட்களாக இந்தி யா செய்து கொண்டுள்ளது அதில் முதலில் பலியாவது பதவிசுகத்திற்கு அலையும் அரசியல் பதர்கள்..

ஏற்கனவே ஈழ பிரச்சனைக்காக தெரு முக்கில்
கத்திவிட்டு போகும் இந்த வியாதிகளை உண்மையானவர்கள் என இளித்தவாய் தமிழர்கள் நம்பி இருக்கும் வரை இவர்கள் கூறுவதுதானே உண்மை.. டில்லிகாரனுக்கு தலையையும் தமிழ்நாட்டுக்கு வாலையும் காட்டும்
இவர்கள் போய் வந்து என்ன அறிக்கைவிடுவார்கள் என்பது நாம் அறிந்ததே! அது கொலையாளிகள் மேனன் மற்றும் நாராயணன் கொடுக்கும் அறிக்கையின் மீள்பதிவாகவே இருக்கும்! சக தமிழினத்தவரே சொல்லிவிட்டார்கள் அகதி முகாம்கள் நன்றாக உள்ளது என நீர் என்னயா சொல்வது என மேற்குலத்தின் வாயை அடைக்க போகிறார்கள்..

நாம் இங்கு எழுதுவது முட்கம்பிகளுக்குள் இருக்கும் தமிழர்களுக்கு தெரியாது எனினும் நம்முடைய வேண்டுகோள் ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனை போன்று அங்கு வரும் எங்கள் வியாதிகளை கல்லால் அடித்து விரட்டுங்கள்.. ஆமை புகுந்த கிணறும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள் ..இவர்களை பொறுத்தவரை இது சரியே!

ஒக்ரோபர் 9, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்’நாட்டு’ மீனவர் பிரச்சனையும் ..தமிழ் தேசியமும்..

தமிழ் ‘நாட்டு’ மீனவர்களை சுட ஆரிய ‘இந்தி’ யா இலங்கை கடற்படைக்கு பயிற்சி!
source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18074
தானும் படுக்காமல் தள்ளியும் படுக்காமல் எப்போதும் தமிழினத்தை குறிவைத்து தாக்கும் இந்தியா தற்போது தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டு விளையாட பயிற்சி வழங்கியுள்ளது.. ஏற்கனவே ஈழ தமிழர்களின் கதையை முடித்தாகிவிட்டது.. இனி அடுத்து தமிழக தமிழர் தானே! அதுதானெ முறை?

slind

இதை எடுத்து சொன்னால் இந்தி தேசிய அடிப்பொடிகள் சீனா பாகிஸ்தான் என்று.. பசப்புவார்கள் அவர்களிடத்தில் ஒன்றைதான் நாம் கேட்க முடியும்..ஏன் சிங்களன் உங்கள் அக்கா தங்கையின் மீதி மையல் கொண்டுவிட்டால் .இதைதான் சொல்வீர்களா? நாம் பெண்ணை சப்ளை செய்யவில்லை என்றால் சீனாக்காரனும் பாகிஸ்தான்காரனும் சப்ளை செய்து விடுவார்கள் என்று?..இவர்கள் செய்தாலும் செய்வார்கள் ஏன் விளக்கு கூட பிடிப்பார்கள் …இப்படித்தானே இந்தியத்தால் இவர்களுக்கு மூளை சலவை செய்யபட்டுள்ளது..

tnfisher

அவர்களை விடுங்கள்..மீனவ சமுதாய மக்களே! உங்கள் இரண்டு குப்பத்து மக்களிடையே சண்டை என்றால் இரண்டு குப்பங்களும் பற்றி எரிகிறது..எல்லையில்லாத கடலுக்குள்ளே உங்களுக்குள் எல்லை தகராறு வருகிறது.. ஆனால் உங்களை தினந்தோறும் சுட்டு கொல்லும் சிங்களினிடத்தில் ஏன் ஒருமுறை கூட திருப்பிதாக்கவில்லை? அவனிடத்தில் துப்பாக்கி இருக்கிறது சரி நீங்களும் துப்பாக்கி ஏந்தலாமே? ஏன் நீங்கள் இன்னும் போராளியாக மாறவில்லை.. அதிகமாக மீன் பிடித்தால் வருமான வரித்துறைக்காரன் 6DD(e) of Rules, 1962 பிரிவின் படி உங்கள் வீட்டு வாசலை தட்டுகிறானே அந்த களவாணிகளையாவது ஒரு நாள் சிறைபிடித்து வைத்தீர்களா? மற்றும் ஒரு செய்தி தமிழக மீனவர்களை காப்பாற்ற தமிழ்நாடு மீனவளத்துறை அதிரடி நடவடிக்கை..என்னமோ ஏதோ என்று பார்த்தால்.. கச்சதீவை தமிழக மீனவர்கள் நெருங்க கூடாதாம்.. மாற்று வழியாக ராமேசுவரம் மீனவர்களை தேவிபட்டினத்தில் மீன் பிடிக்க சொல்கிறார்கள்..அடபாவமே! அதை விட ஊர் ஏரி குளத்தில் மீன் பிடிக்க சொல்லலாமே?

கட்சதீவுக்கு ஒரு நீதி என்றால்..காசுமீருக்கும் அதே தான் தீர்வு..உடனடியாக ஒப்ப்ந்தம் போட்டு காசுமீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இணைத்துவிடல் வேண்டும்..செய்வார்களா? இந்தி அரசியலில் காலங்காலமாக ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் காசுமீர் பண்டிட்டு குடும்பத்திற்கு ஆப்பு இறங்குமல்லவா?சிங்களவன் தனது பரம் எதிரியாக நினைப்பது இந்தி யர்களை அல்ல! ஈழத்து தொப்புள் கொடி உறவுகளாக உள்ள நம்மைத்தான்!.. இந்திகாரர்கள் எதிர்காலத்தில் சிங்களவன் கேட்கிறான் என்றால் நம்மையும் விற்க தயங்க மாட்டார்கள்.. எனவே தமிழக தமிழர்கள் அரசியல் வியாதிகளை நம்பி தந்தியடிப்பது..உண்ணாவிரதம் இருப்பது.. தெரு முக்கில் கத்திவிட்டு வீட்டிற்கு போய் இழுத்து போர்த்தி தூங்குவது போன்ற காலத்திற்கு ஒவ்வாத செயல்களை கைவிடல் வேண்டும்.. இன்று எத்தனை சிங்குகள் ..மலையாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? இது எல்லாம் இளிச்சவாய் தமிழர்கள் நமக்குத்தானே?

இதற்கு தீர்வு எல்லாம் தமிழ்”நாடே”.. சாதி சமயங்கள் அற்ற சோசலிச தமிழ்நாட்டை அமைப்பதே இன்று நம் கண் முண் உள்ள தீர்வாகும்..ஆயுத வழி போராட்டமோ அறவழி போராட்டமோ..எதுவாக இருந்தாலும் தமிழ்தேசிய தோழர்களுக்கு இன்று தேவைபடுவது தொலைநோக்கு பார்வை.. அதாவது தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தேசிய உணர்வை ஊட்டுவதோடு.. அணுக்கரு..வேதியல் ..உயிரியல் ஆயுதங்கள் பற்றிய அறிவை ஊட்டுவதாகும்.. அதுவே நம் மீது கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை ஊட்டும்.. நமக்கு இங்கே இடமில்லையென்றால் வேறு எவனுக்கும் இங்கே இடமில்லை.. இவ ர்களை சுளுக்கெடுப்பதே நமது முதற்கடமை!!தமிழ்தேசிய தோழர்கள் செய்வார்களா?

ஒக்ரோபர் 8, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தெற்காசிய பேட்டை ரௌடியின் அட்டகாசம்..வாக்களிக்கும் இயந்திரங்கள் எதாவது செய்யமுடியுமா?

roudi

முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர்.
மூலம்:http://inioru.com/?p=6106
தனது முத்தானா ஒலவாயை இந்தி திருநாட்டின் சார்பாக கன்னட களவாணி ஒன்று வாய்திறந்து உள்ளது.. இவனுங்களுக்கு தனக்கு கீழே வலிமைகுறைந்த யாராவது நன்றாக இருந்தால் பிடிக்காது..நன்றாக அல்ல மூன்று வேளை நன்றாக உண்டாலே இந்தி அடிப்பொடிகளுக்கு வயிறுவாயெல்லாம் எரிய ஆரம்பித்துவிடும்..அதுவும் தமிழனாக இருந்தால் சொல்லவே வேண்டாம்..இச்செய்தியின் அடிப்படையில் கூர்ந்து கவனித்தால் மொத்த தமிழனத்தையும் ஒல் சேலில் வாங்கிவிட்டதாக நினைப்பு.. இன்னோரு மலையாள குள்ளநரி ஈழ தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை கட்டி எழுப்பி விடுவார்களாம்..அதை எப்படியாவது இந்தி யா தடுக்குமாம்..

fg

எவன எங்க அடிச்சுக்கிட்டா இவனுங்களுக்கு என்ன? இவனுங்க காசுமீர் அரிப்பையே இவர்களால் தடுக்கமுடியவில்லை..ஏன் அடுத்தவனிடத்தில் தலையிட வேண்டும்?.. தனது வீரத்தை ஒரு இனக்குழுமத்திடம் காட்டும் இவர்கள் அதே போல வம்பிழுக்கும் சீனா பாகிஸ்தானிடம் காட்ட தயாராக இருக்கிறார்களா? இவர்கள் பருப்பு அங்கே அவிய வாய்ப்பில்லை.. இளிச்சவாய் தமிழர்களிடம் மட்டும் தான் அவியும்.. ஈழ தமிழர்கள் செய்த ஒரே பிழை அவர்களை போலவே.. இவர்களும் ஆங்காங்கே (தமிழ்நாட்டை தவிர்த்து) குண்டு வைத்து காட்டியிருக்கவேண்டும்.. அதை அவர்கள் செய்யாததால் தான் இவ்வளவு தெனாவெட்டு பேச்சு! இரண்டாவது பிழை ஆறரை கோடி ஆட்டு மந்தைகளை (தமிழுணர்வாளர்களை தவிர்த்து) தொப்புள் கொடி உறவு அவரை கொடி உறவு என்று இந்தி யாவை பகைக்க விரும்பாமல் வீழ்ந்து போனது.. ஆனால் இப்போது ஒரு தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும்.என நினைக்கிறேன் இங்கே அனைவரும் ஆட்டு மந்தைகளாகவே உள்ளனர்.ஆட்டுக்கு புல்லை கொடுத்தால் தின்றுவிட்டு சாணத்தை இடுவது போல.. இவர்களுக்கும் ‘புல்லை’ கொடுத்தால் வாக்குகளாக இடுவார்கள்..

voting machines

வாக்களிக்க தயாராக இருக்கும் இயந்திரங்கள்

இந்த விசிலடிச்சான் குஞ்சுகாளை விட்டு விட்டு..ஆக்க பூர்வமாக செயல்படவேண்டும்..அடுத்த அல்லது அதற்கடுத்த இலங்கை தேர்தல்களில் மேற்குலகின் நண்பராக அறியபடுகிற ரணில் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சீனாவின் கரங்களை ஈழதமிழர்கள் பலமாக பற்ற வேண்டும்.. அதுவரை அதே ஒர்மத்தையும் வஞ்த்தையும் நெஞ்சில் நிறுத்தி கொள்ளுதல் வேண்டும்

ஒக்ரோபர் 7, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இறப்பில் கூட இல்லாத திராவிடம!!

thekkadi

எப்படியோ 25 சுற்றுலாப்பயணிகள் மட்டுமே உயிர்பிழைத் திருக்கிறார்கள். இதுவரை தமிழர்களின் 15 சடலங்கள் உட்பட இது வரை 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 50 சடலங்கள்?

“சாயங்காலம் ஐந்தரை மணிக்கு இந்தக் கோர விபத்து நடந்திருக்கிறது. இறந்தவர்கள் கையில் கட்டியிருக்கும் அத்தனை கடிகாரங்களும் 5.30-ல் நிற்கின்றன. 7 மணிக்குதான் போலீஸ் எங்கள் உதவியைக் கேட்டது. கொச்சியிலிருந்து 31 பேர் வந்தோம். 3 குழுவாகப் பிரிந்து ஆக்ஸிஜன் உதவியோடு மூழ்கித் தேடித் தேடி எடுத்து வருகிறோம். சில இடங்களில் 100 அடி 120 அடி ஆழம் இருக்கிறது. பாறை இடுக்குகளில் குழந்தைகளின் பிஞ்சு சடலங்கள்” -கவிழ்ந்த படகின் முதுகில் நின்றபடி முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டே சொன்னார் கப்பல்படை வீரர் அவினாஷ்.

தன் குடும்பத்தில் 9 பேரை பறிகொடுத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் பெரியகுளம் சரஸ்வதி.

“தேக்கடிக்குப் போகணும்னு நான்தானே கட்டாயப்படுத்தி கூட்டி வந்தேன். எங்க குடும்பத்துல 9 பேரை சாகடிச்சிட்டானே அந்த பாவிப்பய டிரைவர். நான் டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருந்தேன் சார். என் மகள் தாரணியும், சந்தியாவும் “மான், யானை, காட்டெருமை எல்லாம் வரும்னு சொன்னியே எங்கேம்மா’ன்னு கேட்டு அடம்புடிச்சதுங்க. “இங்கே வாங்கம்மா… நான் காட்டறேன்’னு எங்க அண்ணன் ஜெயப்பிரகாஷ் குழந்தைகளை அப்பதான் போட்டோட இன்னொரு பக்கம் கூட்டிப்போனார். படகு வேகமா போயி லெப்ட்ல லேசா திரும்புச்சு. படகு சாயுற மாதிரி இருந்துச்சு. ஏய்… கவுறப்போகுதேனு கத்திக்கிட்டே அந்த டிரைவர் தண்ணிக்குள்ள குதிச்சுட்டான். எனக்கு ஒண்ணும் புரியலை. வேகமா எந்திரிச்சு ஸ்டேரிங்கை கெட்டியாப் புடிச்சேன்… முடியலை… படகு திடீர்னு தலைகுப்புற கவுந்திருச்சு. செத்தம்னு தான் நெனைச்சேன். கொஞ்ச நேரத்துல ஃப்ரன்ட் கண்ணாடியை உடைச்சு என் னை இழுத்து வேற படகுல போட்டாங்க. அந்தக் கண்ணாடி குத்திடுச்சு.

பயணிகள் எல்லாரும் ஒரே பக்க மாகப்போய் நின்னதாலதான் பாரம் தாங்காம கவுந்ததா சொல்றாங்க. திடீர்னு ஸ்டேரிங்கை திருப்பினான். படகு ஒருமாதிரி சாய்ற மாதிரி திரும்புச்சு… போட் கவுறப்போகுதுன்னு சொல்லிக்கிட்டே சீட்ல இருந்து தண்ணிக்குள்ள டிரைவர் குதிச்சிட்டான். என் குழந்தை கள், எங்க மூத்தார் குடும்பம், என் அண்ணன் குழந்தைகள் மொத்தம் 9 பேரும் அய்யோ… அய்யோ… சுருளி அருவியைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போயிருந்தா எங்க வாரிசுகள் பிழைச்சிருப்பாங்களே…” -திரும்பத் திரும்ப சொல்லி கட்டட காண்ட்ராக்டர் ரவியின் மனைவி சரஸ்வதி கதறிய கதறல் இன்னும் நம் இதயத்தை துளைத்துக்கொண்டிருக்கிறது.

முல்லைப்பெரியாறு அணையின் ஏந்தல் பகுதி. இதுதான் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி லேக். இங்குதான்… 30.9.09 புதன் மாலை 5.30 மணிக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற ஜலகன்யகா என்ற பைபர் கிளாஸ் இரண்டடுக்கு படகு கவிழ்ந்து, சுமார் 80 பேரை சாகடித்த கோரவிபத்து நடந்திருக்கிறது.

பயணிகள் பலரை காப்பாற்றிய பயணிகளின் லோடுமேன் கண்ணன், ஜட்டியோடு தண்ணீர் சொட்டச் சொட்ட நின்றார்.

“குமுளி கடை வீதியில நின்னுட்டிருந்தேன். படகு கவுந்திருச்சு, நீச்சல் தெரிஞ்சவங்க ஓடிவாங்க வாங்கனு கத்துனாங்க. படகுக் கண்ணாடிகளை உடைச்சுதான் பலரை காப்பாத்தினோம். படகுல ஒரு மூலையில ரெண்டு குழந்தைங்க… கட்டிப்புடிச்சபடி பிணமா படு பயங்கரம்ங்க…” -கண்கலங்கினார் இளைஞர் கண்ணன்.

“50 வருஷமா ஒரு விபத்தும் நடந்ததே இல்லையே…” -புலம்பிக்கொண்டிருந்த தேக்கடி படகுத்துறை ஊழியர் களிடம் கவிழ்ந்த படகு பற்றி கேட்டோம்.

“மற்ற 10 படகும் இரும்புப்பலகையி லான படகுகள். கவுறவே கவுறாது. அதோட மாடியெல்லாம் ஓப்பனா இருக்கும். ஸ்ட்ராங்க்கா இருக்கும். இது ஒண்ணு தான் ஃபைபர் பிளாஸ்டிக் போட். சென்னையில் நர்கீஸ் கம்பெனியில 80 லட்சத்துக்கு வாங்கினார்கள். புத்தம் புது போட். ஆகஸ்ட் 17 அன்னைக்குதான் லேக்கில் ஓட விட்டாங்க. ஃபர்ஸ்ட்லேயே கம்ப்ளைண்ட்தான். பேலன்ஸ் இல்லாம இப்படி அப்படி சாயுதுன்னு கம்ப்ளைண்ட்ஸ். அதிகாரிகள் கண்டுக்கலை. இந்தப் படகு எல்லாம் மீன்பிடிக்க மட்டும்தான் பயன் படுத்தணும். கமிஷன் கிடைக்குதேன்னு 80 லட்சம் கொடுத்து வாங்கிட்டு வந்து 80 பேரை கொன்னுட்டாங்க. ஜாலியாக படகில் சவாரி செய்துகொண்டே, ஏரியை ஒட்டிய சரணாலயத்தில் வன விலங்கு களைக் கண்டு ரசிப்பதற்காக தினமும் சராசரியாக ஆயிரம் சுற்றுலா பயணி கள் தேக்கடிக்கு வருகிறார்கள்.

படகின் கீழ்த்தளத்திற்கு 100 ரூபாயும், மேல்தளத்திற்கு 150 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு டிக்கெட் இல்லை. கவிழ்ந்த படகில் 75 சீட்டுகள்தான். எக்ஸ்ட்ரா நாற்காலிகளைப் போட்டு 83 டிக்கெட் கொடுத்திருக் கிறார்கள். 20-க்கும் அதிகமான குழந்தைகள் பயணித்திருக்கிறார்கள்” என்றனர்.

“கேரள சுற்றுலாத்துறை வருடத்திற்கு வரும் 120 கோடி வருமானத்தை மட்டும்தான் பார்க்கிறது. இவ்வளவு பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் டில் தீயணைப்பு நிலையமோ, மீட்புக்குழுவோ ஏற்படுத்தவில்லை. எந்தப் படகுக்கும் கண்டக்ட ரும் இல்லை” -வேதனையைக் கொட்டினார் குமுளி ஹோட்டல்கள் சங்கத் தலைவர் சுப்ப ராயலு. தேக்கடி படகு விபத்து பற்றி அறிந்ததும் பதட்டத்தோடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் செரியன் பிலிப்ஸை தொடர்புகொண்ட கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி “”நம்ம மலையாளிகள் யாராகிலும் இறந்தார் களோ…?” என்று கேட்டார்.

“இல்லை… இல்லவே இல்லை” என்றதும் நிம்மதியாக போனை கட் செய்தார்.

மலையாள தொலைக்காட்சிகள் கூட, “”நம்ம மலையாளிகள் யாரும் மரிக்கவில்லை. 13 வருடம் முன்பு கும்பகோணத்துக்கு போய்விட்ட 3 மலையாளிகள் படகு விபத்தில் இறந்திருக் கிறார்கள். அவர்கள் “முழுக்க” மலையாளிகள் இல்லை” என்று ஃபிளாஷ் நியூஸ் ஓட்டிக் கொண்டிருந்தன.
இது என்னடா தேசம்!

(மூலம்:தெரியவில்லை)
இது திராவிடம் பேசும் திராவிட சிகாமணிகளுக்கு புரிந்தால் சரி…

ஒக்ரோபர் 6, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழக அடிமைகளை நாடிபிடித்து பார்க்கவந்த ராகுல் என்ற ஆரிய முதலாளி!

இத்தனை நாள் தமிழ்நாடு தமிழர்கள் என்றால் வேப்பங்காயாய் இருந்த தமிழ் எதிரிகளுக்கு இன்று குளிர்விட்டு போய்விட்டது ராகுல் என்பவன் தமிழ்நாட்டிற்கு வந்து தாராளமாக சுற்றி திரிகிறான்.. ஈழ தமிழர்களுக்காக தானும் தங்கள் குடும்பமும் உயிரை குடுத்து(எடுத்து) பாடுபடுவதாக புளுகுகிறான்.இவர்களை வளர்த்து விட்ட திராவிடம் பேசும் கழுதைகள் இன்று அவர் நம்மை வந்து சந்திக்கவில்லையாம் ..ஒப்பாரி வேறு!

உண்மையில் அவன் வந்தது தமிழக ஆட்டு மந்தைகள் எதற்கு விலைபோவார்கள் என கணிப்பதற்கே! கல்லூரி மாணவர்கள் இருந்து காய்கறி வியாபாரிகள் வரை..அரவணிகள் வரை .. அனைவரும் போராடி பார்த்தும்..16 பேருக்கும் மேல் தீக்குளித்து செத்தும் கொஞ்சம் தமிழுணர்வு மேல் எழும்பிய அந்த நேரத்தில் அதை அரசியல் சாணக்கியமும் தமிழின வரலாற்றின் முதுபெரும் தமிழ் ஈன தலைவர் எப்படி அமுக்கினார்.. நமக்கு கொஞ்சமும் தமிழ்நாட்டில் தேறாது என நினைத்த பாராளுமன்ற தேர்தலில் இந்த இந்திய விசுவாசி இவ்வளவு சீட்டுகளை பெற்று கொடுத்திருக்கிறாரே! எப்படி இது சாத்தியம்? என ஆராயவே மெனக்கெட்டு இங்கு வந்திருக்கிறான்.. தமிழனை சக தமிழனை பற்றி தேர்தல் நேரத்தில் சிந்திக்க விடாமல் செய்தது எது? இதை இந்த மந்தைகளிடம் ஆராய்ச்சி செய்ய வடகத்தியான்கள் ரொம்ப மெனக்கெட வேண்டாம் கீழுள்ள படங்களே சான்று!.

rahul

பகுத்தறிவு ..பகுத்தறிவு..என ஓலமிட்டு பகுத்தறிவு இல்லாமல் இந்த தமிழ் சமுதாயத்தினை சிந்திக்கவிடாமல் பாழ்படுத்தியவர்களே! அதே ஆயுதத்தினை ஏந்தி உங்கள் வேலைக்கும் ஆப்புவைக்க ஒருவன் கிளம்பி விட்டான்..இனி சட்டமன்ற தேர்தல் வரபோகிறது.. அடுத்த 5 ஆண்டுகளில் காங்கிரசு கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என நம்பிக்கையோடு சொல்கிறான்.. தமிழ் தமிழ் நான் தமிழனுக்காக கடலில் மிதப்பேன்.. செருப்பாய் இருப்பேன்.. என நீங்கள் பீலா விட்டாலும் தமிழனுக்கு மேல் உள்ள படங்களில் உள்ளதை கொடுத்தால் போதும்! இனவுணர்வாவது மண்ணாங்கட்டியாவது.. இங்கு தமிழனுக்கு பிரச்சனை யார் அதிகம் கொடுப்பார்கள் என்பது? நிச்சயமாக நீங்கள் அதிகம் கொடுக்க முடியாது.. வடகத்தியான்களிடம் பணத்தால் போட்டி போட முடியாது..
சுருக்கமாக சொன்னால் உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்து கொண்டீர்கள்! இனி இருப்பதையாவது காப்பாற்றி கொள்ளுங்கள்.. அதாவது உங்கள் தொல்லை காட்சிகளை மானாட மார்பாட அதை பார்த்து தமிழன் கோவணத்தோடு ஆட..

கபில் சிபில் என்ற கபோதி இந்த மந்தைகளின் ஆட்டத்தினை பார்த்துதான் சொல்கிறான் இந்தியை தமிழகத்தில் கட்டாயம் ஆக்குவோம் என்று..ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிட வில்லையே! புரியவில்லையா? அடுத்த அறிக்கை இப்படித்தான் வரும்.. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என அன்றே சொன்னார் அண்ணா! புரியவில்லையா? உடன் பிறப்பே? என.. இந்த பதிவை படித்துவிட்டு செல்லும் அனைவரும் “ஏக் காவுமே ஏக் கிசான் ரகுதாத்தா”! என பேசி பழகவும்

பின் குறிப்பு: இது யாரையும் இழிவுபடுத்தி எழுதும் நோக்கமல்ல பெரும்பான்மையோர் தமிழகத்தில் இவ்வாறுதான் உள்ளார்கள் என்பதற்காகவே!(தமிழுணர்வாளர்கள் பொறுத்தருள்வார்களாக)..யாரையும் புண்படுத்தி இருந்தால் முன்கூட்டியே மன்னிக்க வேண்டுகிறேன்! நான் தமிழ் இன வெறியன் இல்லை. உலகை ஆண்ட தமிழினம் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனைப்படும் உங்களில் ஒருவன். 5000 வருட தமிழன் என்கிற அடையாளம் மறந்து இந்தி யன் என்கிற போலி அடையாளத்தை மறுப்பவன்..

செப்ரெம்பர் 11, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

இந்தி ய படையினரின் வீரம்!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பழுதடைந்த தமிழக மீனவர்களின் படகைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த இந்திய கடலோரக் காவல் படையினரை நோக்கி இலங்கை கடற்படையினர் சரமாரியாக சுட்டுள்ளனர். இதையடுத்து உயிர் தப்புவதற்காக இந்திய கடலோரக் காவல் படையினர் கைகளை மேலே தூக்கி சரணடைவது போல நின்றார்கள் என்று கூறியுள்ளனர் மீனவர்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22-ந்தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு ஒன்று பழுதடைந்து நின்று விட்டது.

கச்சத்தீவு அருகே நின்று போன அந்தப் படகில், சதீஷ், ஜோசப், அந்தோணி, முனியசாமி ஆகிய மீனவர்கள் தவித்துக் கொண்டிருந்தனர்.

இதையடுத்து இவர்களை மீட்பதற்காக மீன்வளத்துறையின் அனுமதியுடன் 10 மீனவர்கள், 2 படகுகளில் விரைந்தனர்.

கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களை இலங்கை கடற்படையினர் மீன் துறை அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர்.

இதையடுத்து பழுதடைந்து நின்ற படகை கயிறு கட்டி இழுக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஹோவர்கிராப்ட் மூலம் இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையினர் வந்தனர்.

பழுதடைந்த படகை மீட்கும் முயற்சியை அவர்கள் பார்த்துக் கொண்டிருநதனர். அந்த சமயத்தி்ல் இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரு ரோந்துப் படகுகள் அங்கு விரைந்து வந்துள்ளன.

வந்த வேகத்தில் அவர்கள், இந்திய கடலோரக் காவல் படையினரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதை எதிர்பார்க்காத இந்திய கடலோரக் காவல் படையினர், கைகளை மேலே தூக்கியபடி நின்றனராம்.

படகை மீட்கச் சென்றவர்களும், சிக்கித் தவித்த மீனவர்களும் மரண பீதியில் படகுகளுக்குள் பதுங்கிக் கொண்டனராம்.

பின்னர் கடலோரக் காவல் படையினரை நெருங்கி வந்த இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி விட்டுப் போய் விட்னராம்.

அதன் பின்னர் தமிழக மீனவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என்று வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் கூறுகையில், நமது நாட்டு கடலோர காவல் படையினர் மீது இலங்கை கடற்படையினர் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர். என்ன நடக்கிறது என்பது தெரியாததால் நாங்கள் படகுக்குள் ஒளிந்து கொண்டோம்.

இந்திய கடலோர காவல் படைக்கே இந்த நிலை. எங்களுக்கெல்லாம் என்ன பாதுகாப்பு என்றே தெரியவில்லை என்று குமுறினர்.

இலங்கை கடற்படை கிட்டத்தட்ட ஒரு ரவுடிக் கும்பலாகவே மாறிப் போய் விட்டது. யாரைப் பார்த்தாலும் சுடும் மனோ பாவத்திற்கு அவர்கள் வந்து விட்டனர். அதை சுட்டு, இதைச் சுட்டு இப்போது இந்திய படையினரையே சுடும் அளவுக்கு அவர்களுக்கு கொழுப்பு கூடி விட்டது.

அதைவிடக் கொடுமை, அவர்களைப் பார்த்து நமது வீரர்கள் கையை மேலே தூக்கி சரணடைந்தது போல நின்றதுதான்.

மத்திய அரசு ஏதாவது செய்தால் நல்லது.

http://thatstamil.oneindia.in/news/2009/07/28/tn-lankan-navy-now-targer-indian-coast-guard.html
பின் குறிப்பு:

காட்டிக் கொடுப்பது கூட்டிக்கொடுப்பது மட்டும் தான் செய்வாங்க போலிருக்கு. எவனாச்சும் துப்பாக்கியா தூக்கினா கப்புன்னு கைய தூக்கி அம்மணமாயிடுவாங்க. நல்ல ராணுவமைய்யா. வல்லரசுன்னா இப்படித்தான் இருக்கோணும். இவங்களுக்கு வேலையே அப்பாவி மக்களை கொல்றதும் கற்பழிக்கறதும் தான். எதிரி சுட்டவுடன் மூச்சா போயிட்டானுங்க. தூத்தெறி. பொந்தியா வல்லரசுன்னு அறிக்க விடற அல்பங்க இனி கொஞ்சம் யோசிக்கனும்.

அவர்கள் இங்கேயிருந்து கிளம்பி போய் ராசபக்சே ஓத்தாபய ரெண்டு பேரையும் பார்ப்பானுங்க. சிரிச்சிகினே போஸ் கொடுப்பாங்க. அங்க இருந்து இங்க கிளம்பி வந்து இனி இப்படி நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுத்ததா அறிக்கை விடுவாங்க. அப்பால இங்க அடிவாங்கி அம்மணமா வந்த வீரனுங்க எங்களுக்கு ஒன்னுமே நடக்கல, மீனவங்க பொய் சொன்னாங்கன்னு ப்ளேட்டை திருப்பி போடுவாங்க. நல்லவேளையா புலிங்க ராணுவ உடையில் வந்து சுட்டாங்கன்னு சட்டமன்றத்துல அறிவிக்க நாராயணன் நடவடிக்கை எடுக்கமாட்டாருன்னு நம்புவோம்.

ஜூலை 28, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

தமிழக தமிழ்தேசிய உணர்வாளர்களுக்கு- இன்றைய தேவை சுயசார்புள்ள பொருளாதார கட்டமைப்பு,இனஉணர்வுள்ள சமுதாயமே!!

உலகின் பல தேசிய இனங்கள் தோல்வி அடைந்த வரலாற்றினை கூர்ந்து கவனித்தால் ஒடுக்கும் தேசிய இனங்கள் தமது எதிரியாக கருதும் தேசிய இனங்களை ஒடுக்கும் போது அவர்கள் முதலில் கைவைப்பது அந்த இனத்தின் வாழ்வாதரத்தில் தான் உதாரணம் நம் கண்முன்னே உள்ளது சிங்கள இனவாத அரசானது போரில் வெற்றி கொள்ளபட்டதாக தானே அறிவித்து கொண்டு அம்மக்களை
மாக்கள் போல் முட்கம்பி வேலிகளில் அடைத்துள்ளது மீள்குடியேற்றம் என்ற பெயரில் சிங்களவரை அந்த பகுதியில் குடியேற்றி குடும்பதிற்கு 2 ஏக்கர் நிலம் தோட்டம் அமைக்க 1 ஏக்கர் நிலம் என பங்கிட்டு கொடுக்கபோகிறார்களாம்..யார் வீட்டு நிலம் நம்முடைய உறவுகளுடையதல்லவா? நம் பாட்டன் முப்பாட்டன் வளமையாக வாழ்ந்த நிலமல்லவா? ஏகாதிபத்தியங்கள் எப்போதும் ஒரே மாதிரியே சிந்தித்து வருகின்றன.

ஒடுக்கும் தேசிய இனங்கள் எப்போதும் ஒடுக்கபடும் தேசிய இனங்களை
தம்மிடம் கையேந்தும் நிலையையே வைத்திருக்கின்றன.. இன்று ஈழதமிழர்களை அரசியல் தீர்வு.. உணவு ..மருத்துவம் என அனைத்திற்கும் சிங்களத்தினை நோக்கியே கையேந்த வைத்துள்ளன..
இதற்கு சற்றும் குறைவில்லாதது நாம் வாழும் ‘இந்தி’ தேசியம்.. இன்று அடிப்படை வாழ்வாதரமான விவசாயத்திற்கு காவிரிக்கு கன்னடனையும்,முல்லை பெரியாறுக்கு மலையாளியையும், மீன்பிடிக்கு சிங்களவனையும் நம்பி கையேந்தி நிற்குமாறு செய்துள்ளது.தேவை தீர்ந்துவிட்ட உடனே மனிதன் தன் அடுத்த கட்டத்தினை சிந்திக்க போகிறான்.. என திட்டமிட்டு செயல்படுகிறது..தனி தமிழ்நாடு பேசும் தோழர்கள் ஒன்றினை கவனத்தில் எடுக்கவேண்டியது அவசியம்..

இந்திய தேசம் நம்மை வஞ்சிக்கிறது அது அனைவரும் ஒத்து கொண்டதே! சரி இனி
நாம் தனி நாடு அடைந்தால் நாம் எப்படி வாழ போகிறோம்? காவிரி.முல்லைபெரியாறு பிரச்சனைக்கு ஐ.நா வந்து தலையிடுமா? அப்படியே தலையிட்டாலும் இந்தி தேசியத்தினை எதிர்த்து எந்த நாடும் நமக்கு ஆதரவாக வந்துவிடுமா? இப்போது ஈழதமிழர்களுக்கு ஐ.நா சபையில் நியாயம் கேட்ட நிலையில் நமக்கு என்ன கிடைத்தது என்ற புரிதல் வேண்டும்.

இன்றும் நாம் பருப்புக்கு மகாராஸ்டிரா.. கோதுமைக்கு பஞ்சாப்.. என அடுத்தவர் கையை நோக்கியே உள்ளோம்.. நம்முடைய இன்றைய தேவை குறைந்தபட்சம் தமிழக நதிகளையாவது ஒன்றிணைப்பது..நம்முடைய விவசாயிகளை தமிழக மக்களுடைய உணவு தேவையை உணர்ந்து அதற்கேற்ப பயிர் செய்ய அறிவுறுத்துவது ஆகியவைதான்.நம்முடைய உள்கட்டமைப்பு சரியாக இருந்தால் இந்திக்காரனிடமோ அல்லது வேறு யாரிடமோ நாம் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை .. எந்த தடை எவன் போட்டாலும் அது குறித்து கவலைபட போவதில்லை..அதற்கு ஈழ தமிழர்கள் நமக்கு முன்னோடிகள்..காலம் சென்ற

தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் திரு தமிழ்செல்வன்
அடிகளார் செகத் காஸ்பரோடு உரையாடியதை கவனியுங்கள்..

வன்னியில் நான் இருந்தபோது அறிந்து கொள்ள ஆர்வம் காட்டிய மற்றொரு விஷயம் சந்திரிகா அம்மையாரின் ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத் தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை புலிகள் காப்பாற்றினார்கள் என்பது. அப்போதைய அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களிடம் இதுபற்றிக் கேட்டேன். “”எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் ஃபாதர். சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது. எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம். பணப்பயிர் களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித் தோம். இயற்கை உரங்களுக்குப் பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து செயற்படுத்தினோம்… சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம் நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் “வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியைக் கேட்டுத்தான். அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார். நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது.

இது சாதாரணமானதல்ல நீண்டகால தொலைநோக்கு பார்வை அப்பார்வை தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு தேவை! வெறுமனே கொடிபிடிப்பதும். தாம் தூம் என்று மக்கள் முன்னே ஆர்பாட்டம் செய்வதும் தமிழ்தேசியத்திற்கு தீர்வினை தராது..

தமிழக தமிழர்களுக்கு இன உணர்வினை ஊட்டுதலும் இங்கு அவசியமாகிறது.. தமிழக தமிழருடைய இன உணர்வினை தடுப்பது.. புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு ..அவர்கள் வீசும் எலும்பு துண்டுகளுக்கு..தமது சூடு சொரணை.. மனைவி..மக்கள் மற்றும் தமிழக தமிழர்களாகிய நம்மையும் விற்கும் திராவிட கட்சி கும்பல்களும் அவர்தம் தொல்லைகாட்சிகளும்தான்..தமிழனை சிந்திக்க விடாமல் மானாட மார்பாட,குத்தாட்டம்.பார்ப்பவர்களாகவும்..ரசிகர்களாகவும், பெண்களை சீரியல் பார்க்கும் அழு மூஞ்சிகளாகவும் வைத்திருக்கிறார்கள்..மக்கள் சிந்திக்க தொடங்கிவிட்டால் இவர்கள் வாழ்வு அவ்வளவுதான் என இவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது..நன்றாக திட்டமிட்டே செய்கிறார்கள்..தமிழர் அவலங்களை காட்ட மறுக்கிறார்கள்..எவன் செத்தால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை வளர்க்கிறார்கள்..இங்கு கன்னடர்களிடம் நாம் கற்க வேண்டிய பாடம் ஒன்று உண்டு கன்னட பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவர்கள் முதலில் தடை செய்வது இவ்வாறான நிகழ்ச்சிகளையும் பிற மொழி குறிப்பாக தமிழ் சேனல்களையும்தான்.. தமிழ்தேசிய உணர்வாளர்கள் முதலில் இவ்வாறான மாயையில் இருந்து தமிழர்களை மீட்டு எடுப்பதே ஆகும். மீட்டு எடுத்தால் நீங்கள் தனியாக இன உணர்வினை ஊட்ட வேண்டிய அவசியம் கூட இருக்காது.அது தானாகவே வந்து சேரும்.. தமிழுணர்வை தக்க வைப்பதும்..எதிர்கால சந்ததியினாரான நம் குழந்தைகளுக்கு ஊட்டுவதும் நமது கடமையே ஆகும்..தமிழன் தனியாக சென்றுவிட்டால் நாம் நம் அடிப்படை தேவைகளுக்காக சோற்றுக்காக பருப்புக்காக முட்டைக்காக ..வேறு ஒருவனிடம் கையேந்த நேரிடும். அவன் இளித்தவாயன் தமிழனை போன்று இருக்கமாட்டான் என தொலை நோக்கு பார்வையுடன் இந்தி தேசியத்தில் தனி அடையாளம் எதுவும் இன்றி..ஒட்டுண்ணிகளாக ..தமிழனை காட்டிகொடுப்பதிலும்.. காவு வாங்குவதிலும் ..டெல்லி சவுத்பிளாக் முதல் ஐ.நா சபை வரை முதன்மையாக .. மனிதம் எதுவும் இன்றி திரியும் மலையாளி கும்பல்கள் தமிழனின் தனித்துவத்தை கண்டு மனம் கொள்ளாமல் ஒக்கேனக்கல்..காவிரி என திரியும் கன்னட கும்பல்கள் இவற்றிக்கு இடையே தமிழினம் போராட வேண்டி உள்ளது. இதற்கு ஒர் வழி முறை இன உணர்வை ஊட்டுதலாகும் இனவுணர்வை எக்காரணம் கொண்டும் விடகூடாது என நம் பிள்ளைகளுக்கு ஊட்டுவதாகும்..ஒரு தமிழ் பெண்மணியான நவநீதம்பிள்ளையின் குரல் மலையாளியான நம்பியாரின் குரலுக்கு முன் அடங்கி போனதை நாம் நினைவு கூர வேண்டும்.. சர்வதேச அமைப்புகளில் பங்கு பெறுமளவிற்கு தங்கள் பிள்ளைகளை கல்வி அறிவோடு ஊட்டி வளர்ப்பது அவசியம்..என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு! நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..

வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன..அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது.. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால்.. என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்!!!

ஜூலை 21, 2009 Posted by | Uncategorized | பின்னூட்டமொன்றை இடுக

ஒடுக்கபட்ட தமிழினத்திற்கு ஆரிய ஏகாதிபத்தியம் அளிப்பதுதான் தீர்வா?

13-வது அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வாய்கிழிய பேசி திரியும் காங்கிரசு களவாணி கும்பல்கள்.அச்சட்டம் ஈழ தமிழர்களால் ஏற்கெனவே நிராகரிக்கபட்டது எனும் உண்மையை ஏனோ செலக்டிவ் அம்னிஷியா போல் மறந்து போகின்றனர்..அல்லது அத்திட்டதினை வலியுறுத்தும் அவர்கள் இந்தியா போன்று மதசார்பற்ற இலங்கை என அவர்களது ஆரிய கூட்டாளியான ராசபக்சேவிடம் வலியுறுத்த தயாரா?சென்னையில் காங்கிரசு பிரச்சார கூட்டதின் போது ராஜீவ்காந்தி’ஜீ ‘ ஏற்படுத்தி கொடுத்த ஒப்பந்தமே தமிழர்களுக்கு தீர்வு என ஊளையிட்ட சோனியா மைனா அந்த ஒப்பந்தித்தின் படி வடக்கு கிழக்கை இணைக்க இலங்கையை மிரட்டுவாரா?

இளித்தவாயன்கள் மேல் ஏறி மிதிக்கு இந்தி தேசியம்

ஈழ தமிழர்களின் அரசியல் ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் தீர்ப்பு சொல்ல இவர்கள் யார்? தெற்காசிய பேட்டை ரவுடி அல்லவா? அங்குள்ள மக்கள் வதைமுகாம்களில் சிக்கி சின்னாபின்னபட்டு கொண்டு இருக்கும் போது ‘இந்தி’யன் ஆயில் கார்பரேசன் மூலமாக பெட்ரோல் பங்கு திறக்கிறார்களாம்.அதுவும் தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் .. அதேபோல கடலுக்கடியில் மின்சாரம் அனுப்ப போகிறார்களாம் .. இதில் கொடுமை என்னவென்றால் அதுவும் தமிழ்நாட்டில் இருந்து.. அங்கே தமிழர்கள் வதைமுகாம் களில் இருக்கும் போது இந்த பொந்தியா காரணமில்லாமல் ஏன் இவற்றை செய்கிறது? இங்கே தான் நாம் சிறிது சிந்தித்து பார்க்கவேண்டும்..ஈழ தமிழர்களை சாகடித்தோர் இனி சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்..ஆரியர்களுக்கு தூரபார்வை அதிகம்!இதை தமிழர்கள் ஏற்று கொண்டே ஆக வேண்டும் இல்லையென்றால் ஆடு மாடு மேய்த்து கொண்டிருந்த இக் கைபர் போலன் கும்பல்கள் இன்று நம் தலை மீது ஏறி மிளகாய அரைக்கும் நிலைவந்திருக்குமா? இந்தி அரசு காரணமில்லாமல் இவ்வேலைகளை செய்யவில்லை.. கூர்ந்து கவனித்தால் ஈழ தமிழர்களை பூண்டோடு ஒழித்துவிட்டு எப்படியும் நம் சிங்கள பங்காளிகள் அங்கு குடியேறிவிடுவார்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தூர நோக்கிலான செயல்பாடே அது!இதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்..

இனி புலம்பெயர்ந்த ஈழ தமிழர்கள் செய்யவேண்டியது என்ன?

இனி ஈழதமிழர்கள் இந்தியா நம் தந்தையர்நாடு பாட்டி நாடு கூறுவதை முதலில் நிறுத்தவேண்டும்..பகைநாடு என்று கூறுதல் வேண்டும்! இவ்வளவுக்கும் காரணமான பொந்திய தேசத்தினை இனியும் இவ்வாறு கூற மானமுள்ள ஈழ தமிழன் முன்வரமாட்டான்.. தொப்புள் கொடி உறவு அவரை கொடி என்று வீரமுள்ள ஒரு தலைவர் கூட இல்லை..சொல்ல போனால் நாங்களே இங்கு அடிமைகளாக உள்ளோம்.. இந்தி தேசியத்தினை பொறுத்தவரை தன் தேசியத்தில் ஒற்றுமை பிறர் தேசியத்தில் வேற்றுமை இதுவே அது கடைபிடிப்பது!இன்று தமிழர்களுக்கு 4 மாநிலம் இலங்கையில் உருவாக்குவோம் என்று இந்தி தேசியத்தின் குரலாய் ஒலிக்கிறதே கோடாலிகாம்பு சிதம்பரத்தின் குரல் காரணம் என்ன? யாழ்பாணத்தான் ,மட்டகிளப்பாண்,திரிகோணமலையான்,வவுனியான் என பிரித்து தமிழர்களுக்குள்ளேயே ஒருவனை ஒருவன் மோதவிடும் செயல்திட்டங்களே அவை! இவைகளை எப்படி முறியடிப்பது? ஈழ அரசியல் தலைவர்கள் இங்கு முந்தி கொள்வது அவசியமாகிறது! ஈழ அரசியல் தலைவர்கள் ஈழத்திற்கான சுயநிர்ணய அடிப்படையுடன் கூடிய அரசியல் அமைப்பு சட்டத்தினை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. புதிதாக வேறு ஏங்கும் தேட வேண்டாம் ஏற்கனவே உள்ள பிற நாட்டு அரசியல் அமைப்பை முன்மொழிய வேண்டும்..புதிதாக தமிழீழம் அமைந்த பிறகு நாம் ரூம் போட்டு யோசித்து கொள்ளலாம்! இப்போதைக்கு தேவை சுய நிர்ணய உரிமை! அதை உள்ளடக்கிய நாட்டு அரசியல் அமைப்பு சட்டம் எங்குள்ளது என தேடலாம் உதாரணம் கனடா. அங்கு க்யூபக் மாகாணத்தில் பிரெஞ்சு பேசும் மொழியினருக்காக தனி க்யுபக் நாடு வேண்டுமா என வாக்கெடுப்பு நடைபெற்றது..அதை உதாரணமாக கொள்ளலாம்.

தமிழக தமிழர்கள் ஈழ தமிழர்களுக்கு எப்படி உதவலாம்?

நாமக்கல் முட்டையும்,கோழியையும்,தஞ்சை பொன்னி அரிசியையும் நெய்வேலி மின்சாரம் உட்பட அனைத்தையும் தின்று தமிழன் முகத்தில் காறி உமிழும் இந்த அண்டை மாநில கும்பல்களை விட.. இவ்வளவு புலம் பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் வாழும் தமிழனுக்காக பொன் பொருள் என வாரிவழங்கிட தயாராக இருந்தும் கூட.. கடைசிகாலம் வரை மறைந்த அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் உட்பட சிங்கள் தேசம் .. சர்வதேசம் .. சரியாக உணவு அனுப்பவில்லை என புலம்பி கொண்டு இருந்தது ஏன்? நம்மை நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி அனைத்திற்கும் காரணம் நாமே ஆகும்..தனுஸ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் வெறும் 18 கி.மி தொலைவே இருக்கும் அவர்களுக்காக நாம் அனுப்பமுடியாதா? தடுப்பது எது இந்த இந்தி தேசம் தானே? நம் முதுகில் குத்தும் மலையாளிக்கு அரிசி,பழம் ,பால் அனுப்பும் நாம் .அதையேன் நம் ரத்த உறவுகளுக்கு செய்யமுடியவில்லை? அடசரி வியாபரமாகவே வைத்துகொண்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதற்காக செய்ய தயராகவே உள்ள நிலையில் தடுப்பது எது? முட்டையில் மயிர் புடுங்கும் இந்தி தேசம் தானே? சிங்கு எவனையாது இப்படி பட்டினி போட்டு கொல்வார்களா? இங்கு விடுதலை அடையவேண்டியது ஈழதமிழன் மட்டுமல்ல நாமும்தான் என புரிந்து கொள்ளுதல் வேண்டும்!

எப்படி இந்த இந்தி நாட்டை அணுகுவது?

சிந்தனை செய்து பாருங்கள்! இந்தியா என்னும் நாடு இந்து என்னும் ஆறிபோன ஆரிய சித்தாந்ததினை அடிப்படையாகவும், இந்தி என்னும் வடமொழியை செயல்திட்டமாக கொண்டு கண்ணுக்குப் புலனாகாத ஒரு பூணூலால் கட்டப் பட்டுள்ளது. பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்,மார்க்சிய கம்யூனிஸ்டு, அ தி மு க, போன்ற மிதவாத அரசியல் அமைப்புகள்; ஆர் எஸ் எஸ் , இந்து முன்னணி, பஜ்ரங் தளம், பாரதிய சனதா, மா லெ குழுக்கள், மக இ க போன்ற தீவிர அரசியல் பேசும் இயக்கங்கள், இந்திய இராணுவத் தலைமை, மையப் புலனாய்வுத் துறை, இந்திய தலைமை செயலகம், நீதித் துறை, வானொலி, தொலைக்காட்சி, பத்திரிக்கை ஆகிய அனைத்தும் இந்தப் பூணூல் கட்டமைப்பின் ஒவ்வொரு இழைகளாகும்.

இந்தக் கட்டமைப்பு மிக நுணுக்கமாக, வஞ்சகமாக பின்னப் பட்டுள்ளதால் தமிழக தமிழர்கள் மிக மிக கவனமாக அணுகப்பட வேண்டும். இல்லையென்றால் நாம் ஒருவருக்கு ஒருவர் அவர்களுடைய வருணா சிரம் தர்மபடி அடித்துகொள்ள நேரிடும் .ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து ஒடுக்கப் படும் தேசிய இனங்களும் ஒன்று பட்டு விடுதலைகான போராட்டத்தை மேற்கொள்ள முடியும் என்பது, இந்தியா என்கிற பார்ப்பனிய உருவாக்கம் உள்ள வரை சாத்தியமாகக் கூடிய வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஏன் சாத்தியம் இல்லை என்று கூடக் கூறலாம். இங்குள்ள தேசிய இனங்கள் அடிப்படையிலேயே ஒன்றை ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. கன்னடன் தமிழனின் தனித்துவ முயற்சி கண்டு மனம் பொறாதவனாய் அவன் தன்னை விட தாழ்ந்தவன் எனக் காட்ட முற்படுகிறான். மலையாளி, இந்தியா என்ற கட்டமைப்புக்குள் அங்கங்கின்னாதபடி நிறைந்து ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டு, தமிழனின் தனித்துவ வேட்கை தன் அடிப்படை வாழ்வாதாரத்தை பிளந்து விடும் என எண்ணி தமிழனின் மென்னியை திருகுகிறான். பிகாரியையும் ஒரியாக்காரனையும் மதராசியையும் வட நாட்டவன் வெறுக்கிறான், அவமதிக்கிறான். உறங்கும் எரிமலையான பஞ்சாப், எரியும் காசுமீர், அசாம், வட கிழக்கு மானிலங்கள் என எத்தனை முரண்பாடுகள். இத்தனை முரண்பாடுகளிலும் பார்ப்பனியவாதிகளும், பெரு முதலாளிகளும், அரசியல் அற்பர்களும் மட்டுமே ஒருமைப்பாடு, இந்தியா, இந்தியன் என்று அலறிக் கொண்டிருப்பதை கவனியுங்கள். பார்ப்பனியத்தை ஒழிக்க முற்படுங்கள். நீங்கள் புரட்சியெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லாமல் இந்தக் இந்தி கட்டமைப்பு தானே உதிர்ந்துவிடும்!!.

ஜூலை 3, 2009 Posted by | Uncategorized | 1 பின்னூட்டம்